திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. களக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் வழக்கம்போல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட மர்மக் கும்பல் அங்கு தாக்குதல் நடத்தியது. இவர்கள் அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஏந்தி வந்திருந்தனர்.
கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் இந்தக் கும்பல், டீக்கடை முன் இருந்தவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் ஜான் என்ற உள்ளூர் நபர், மற்றொருவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் 6 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் நெல்சன், பிரபாகரன், ராமசாமி, கணேசன், சசிகுமார் போன்றோர் அடங்குவர். இந்த இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் வெறியாட்டம்... டீ கடையில் பெட்ரோல் குண்டு வீசி இருவர் வெட்டிக்கொலை... 6 பேர் படுகாயம்...!
சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரட்டை படுகொலை வழக்கில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தென் மண்டல ஐஜி தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரட்டை படுகொலை சம்பவத்தின் எதிரொலியாக நாங்குநேரி - ஏர்வாடி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்...!! - மாயாவி பட நடிகை தந்தை கொலையில் அதிரடி திருப்பம்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்...!