புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன் ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர் வரக்கூடிய தேர்தலை சந்திக்க ஈபிஎஸ் உள்ளிட்டவர்களிடம் ஒருங்கிணைந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும்... இபிஎஸ் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தமிழை யார் உயர்த்தி பேசினாலும் அவர்களை ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் ஆனால் ஒரு மொழியோடு ஒரு மொழியை ஒப்பிட்டு பேசுவதை ஏற்க முடியாது. கமலுக்கோ அவரது கட்சிக்கோ பாஜக ஆதரவு கிடையாது ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.
இதையும் படிங்க: #BREAKING: கமல் மன்னிப்பு கேட்க மறுப்பு! தள்ளிப்போகும் பட வெளியீடு.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

இதேபோல் அமித்ஷா சமஸ்கிருதம் மொழியில் இருந்து தான் இந்திய மொழிகள் பிறந்துள்ளது என்று கூறினாரே என்ற கேள்விக்கு இந்தியா என்பது பல மொழிகள் பலதரப்பு மக்கள் வாழுகின்ற நாடு அதனால் ஒன்றில் இருந்து தான் மற்றொன்று பிறந்தது என்ற கருத்தை நான் இருக்கவில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது என்னைப் பொறுத்தவரை எனக்கு அதிரடி அரசியல் வேண்டாம். உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற எட்டாம் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார் ஒவ்வொரு நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார்.
அண்ணாமலை குடும்பத்தினுடன் சிங்கப்பூர் சென்று திரும்பி உள்ளார் தொடர்ந்து இனி வரக்கூடிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என்றார்.
இதையும் படிங்க: கன்னட மொழி சர்ச்சை; கர்நாடகாவிடம் சரண்டர் ஆன கமல்...‘ஒரே குடும்பம்’என உருக்கம்...!