தமிழக சட்டசபை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தலைவர் விஜய்யை என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்க பாஜக முயல்வதாக கடந்த ஒரு வாரமாக வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தவெக, அதிமுக, பாஜக ஆகிய தரப்புகளிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வருவாரா? பேச்சுவார்த்தை நடக்கிறதா?” என்ற கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “விஜய் டெல்லி செல்வது கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காக மட்டுமே. இதற்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இதையும் படிங்க: விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜக நிர்வாகி!! பதவியை பறித்த தலைமை!! ஆக்ஷனில் இறங்கிய நயினார் நாகேந்திரன்!
விஜய் கூட்டணிக்கு வர விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. சிபிஐ மூலம் மிரட்டி விஜய்யை கூட்டணிக்கு வர வைப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பேசுகின்றன. எனக்கு விஜய் கூட்டணிக்கு வருவது பற்றி எதுவும் தெரியாது” என்று தெளிவாக மறுத்தார்.

இந்த விளக்கம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. முன்பு பாஜகவின் சில நிர்வாகிகள் விஜய்யை கூட்டணிக்கு அழைத்ததாக கூறியதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது என்.டி.ஏ. கூட்டணியில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், புதிய கட்சிகளை இணைப்பது குறித்து மத்திய தலைமை முடிவு எடுக்கும் என்றும் நயினார் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் விஜய்யின் தவெக கட்சி தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்பது தேர்தல் களத்தை பெரிதும் பாதிக்கும். விஜய் டெல்லி செல்வது கரூர் வழக்கு தொடர்பானதா அல்லது அரசியல் பேச்சுவார்த்தையா என்பது குறித்து ஊகங்கள் தொடர்கின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய வதந்திகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எலெக்ஷன் வேலை எக்கச்சக்கமா இருக்கே!! சம்மன் அனுப்பிய சிபிஐ! விலக்கு கேட்கும் விஜய்!