தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த சம்பவம். சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டு உறுப்பினரானார். ஸ்டாலின் "திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய சகோதரர் ஓபிஎஸ் இணைந்துள்ளார். வருக வருக!" என வரவேற்றார்.
இணைப்புக்கு முன் நடந்த சந்திப்புகளில், ஓபிஎஸ் திமுக கூட்டணியில் தனக்கு சீட் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு ஸ்டாலின் "திமுகவில் இணையுங்கள். கட்சி மரியாதையுடன் நடத்தும். உங்களுடன் சேர்த்து இருவருக்கு சீட் தரப்படும். திமுக வெற்றி பெற்றால் நீங்கள் சபாநாயகராக இருக்க வேண்டும்" என ஆஃபர் கொடுத்ததாக அரசல் புரசல்கள் பரவின. இது உண்மையா என அதிமுக நிர்வாகிகள் ஆர்வத்துடன் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் என்னையும் கூப்டாரு! வரலைனு சொல்லிட்டேன்! திமுகவில் எப்படி பயணிக்க முடியும்?! வெல்லமண்டி நடராஜன் கேள்வி?!

ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் அதிமுகவில் பெரும் அதிர்ச்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓபிஎஸை மீண்டும் சேர்க்க மறுத்த நிலையில், தற்போது அவர் சபாநாயகரானால் சட்டசபையில் எழுந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என அதிமுக தொண்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர். "எடப்பாடி முன் ஓபிஎஸ் சபாநாயகராக இருந்தால் என்ன ஆகும்?" என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கட்சியை ஒன்றிணைக்க முயன்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி TTV தினகரனை வரவேற்றதால் ஓபிஎஸ் திமுக பக்கம் திரும்பியதாக கூறப்படுகிறது. திமுகவில் இணைந்த பிறகு ஓபிஎஸ் "திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இந்த இணைப்பு திமுகவுக்கு பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் ஓபிஎஸ் செல்வாக்கு திமுகவுக்கு உதவும். அதிமுகவுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஸ்டாலின்-ஓபிஎஸ் சந்திப்பு மற்றும் சபாநாயகர் ஆஃபர் விவகாரம் தமிழக அரசியலை சூடுபிடிக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் எடுத்தது தவறான முடிவு! மக்கள் ஏற்க மாட்டார்கள்!! ஓபிஎஸ் ஆதரவாலர்கள் தவெகவில் இணைகிறோம்! புது ட்விஸ்டு!