ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடையே பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழக முதல்வர் விஜய்யின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், தமிழ்நாடு தேர்தல் நடந்து அவர் முதலமைச்சரானதிலிருந்து எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு நீங்களும் அதே போன்று தனித்து போட்டியிட்டு இருக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
அவ்வாது சொல்வது ஊரில் ஏதே ஒரு வீட்டில் திருமணம் நடந்தால் சிறு பிள்ளைகள் நம் வீட்டு நிகழ்ச்சி போன்று இங்கும் அங்கு சென்று வருவார்கள் அதுபோன்று உள்ளது. ஆந்திரா அரசியல் களம் வேறு தமிழ்நாடு அரசியல் நிலைமை வேறு. நான் முதல்வராக வேண்டும் என்று நான் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஒரு பெண் என்னிடம் வந்து ஊழலை ஒழிக்க ஒரு வழித்தடம் வேண்டும் என்று கேட்டு கொண்டார். அது போன்றவர்களுக்காக நான் கட்சி ஆரம்பித்தேன். தனி ஒரு ஆளாக தொடங்கிய ஜனசேனா கட்சி இந்தநிலைக்கு உள்ளது என்றால் அது ஒருங்கிணைந்த போராட்டமே.
எனக்கு பதவி வேண்டுமென்றால் 2007 ஆண்டு என்.டி.ஏ. தரப்பில் எம்.பி.யாக மல்காஜ்கிரி தொகுதியில் போட்டியிடும்படி கோரினர். நான் அதை புறக்கணித்து அரசியலில் கீழ் மட்டத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போன்று மக்களுடன் போராடி உரிமைகளை பெற நினைத்தேன். இதற்காக 10 ஆண்டுகள் அரசியலில் காழ்புணர்ச்சியுடன் பல அவமானங்கள், இன்னல்களை சந்தித்தேன்.
இதையும் படிங்க: தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!
10 ஆண்டுகளுக்கு பிறகு எனது பலத்தை தெரிந்து கொள்ள 2019 ஆண்டு தனித்து நின்றேன். ஆனால் நான் போட்டியிட்ட இரண்டு இடத்திலும் என்னை தோற்கடித்தனர். என்னுடன் இருந்த கட்சியினரும் விலகி சென்றனர். பதவி மட்டுமே எனக்கு முக்கியம் இல்லை மக்கள் பிரச்சனைகள் தீர்க்க வேண்டும். அதற்கு நல்ல தலைவர்கள் வர வேண்டும் அதற்கான ஒரு வழித்தடமாக இந்த ஜனசேனா கட்சி செயல்படுகிறது .
அனைத்து கடினமான தருணங்களை நான் கடந்து வந்துள்ளேன். எனவே இப்போது என்னுடன் இருப்பவர்கள் விலகி சென்றாலும் தனி ஒரு மனிதனாக என்னால் கட்சியை வழிநடத்த முடியும் அதற்கான தைரியும் எனக்கு இந்த 12 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொடுத்துள்ளது. எனவே மற்றவர்களுடன் என்னை ஒப்பிடாதீங்க என பேசினார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!