பாமகவில் அப்பா - மகனுக்கு இடையிலான யுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு மிக முக்கியமான காரணமாக பாமகவில் அடிபடும் பெயர் முகுந்தன். முகுந்தனுக்கு பதவி கொடுத்தது அன்புமணிக்கு பிடிக்கவில்லை. டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் மேடையிலேயே அன்புமணி தனது அதிருப்தியை மிக வெளிப்படையாக முன்வைத்தார். கட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே முகுந்தனுக்கு பதவி கொடுக்க கூடாது, அனுபவம் வாய்ந்தவர்களை போடுங்கள் என்று மேடையிலேயே அன்புமணி கூறினார்.

அதனால் தான் அவர் மேடை நாகரீகம் இல்லாமல் நடந்து கொண்டார் என்றெல்லாம் ராமதாஸ் குற்றச்சாட்டியிருந்தார். இதனிடையே பாமக இளைஞரணித் தலைவர் பதவியை முகுந்தன் பரசுராமன் ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக பதவியை விட்டு விலகுவதாகக்கூறிய அவர், ராமதாஸ் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் எங்கள் எதிர்காலம் என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் பக்கம் முகுந்தன் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் முகுந்தனுக்கு போன் போட்ட அன்புமணி, நீ யார் பேச்சை கேட்டுக்கிட்டு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கன்னு தெரியும். அங்க இருந்தா எதிர்காலம் கிடையாது. இங்கதான் வந்து எதிர்காலம் இருக்கு. இந்த பக்கம் வந்துரு. சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ சீட் தர வெற்றி பெற்றுவிட்டு அரசியல் பயணத்தை தொடரலாம் என டீல் பேசியிருக்காராம்.

இதையும் படிங்க: பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு? - உடைத்துப் பேசிய பேராசிரியர் தீரன் - பாமகவினர் அதிர்ச்சி..!
இங்க அவர் பக்கம்தான் அதிகளவுல மாவட்ட செயலாளர்கள் பலம் இருக்குறதை கணக்குப் போட்டு பார்த்த முகுந்தனால் அன்புமணியின் பேச்சை மறுக்க முடியவில்லையாம். ஏற்கனவே கட்சிக்கு எந்த பாதிப்பும் வந்திடக்கூடாது அப்படிங்கிற குடும்பத்தினருடைய அழுத்தத்தால் தான் பதவியை ராஜினாமா செய்தார். அந்த ராஜினாமா கடிதத்தில் கூட தலைவர் அன்புமணி என்றே குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே இதனால் அப்செட்டில் இருந்த ராமதாஸ், அன்புமணி, முகுந்தன் இடையிலான உரையாடலால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.

கட்சியை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அன்புமணி முயன்று கொண்டிருப்பதாகவும், அதனை தடுக்க சட்ட ரீதியிலான விஷயங்கள் குறித்து ராமதாஸ் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் வர உள்ள நேரத்தில் அப்பா மகன் இடையிலான இந்த பிரச்சனை கட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கலக்கத்தில் இருக்கிறார்களாம் பாமக நிர்வாகிகள்.
இதையும் படிங்க: அடுத்தது தமிழகத்தில் நம் ஆட்சி தான் நடக்க வேண்டும்.. ஒரே போடு போட்ட அன்புமணி ராமதாஸ்..!