பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்துள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும் பொதுக்குழுவை கூட்டி அவரை நீக்குவேன் என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தது மட்டுமில்லாமல் அவருக்கு பக்குவமோ தலைமை பண்போ இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

இது பாமகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உட்கட்சி மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களை உள்ளிட்டோரை இன்று சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: ராமதாஸ், அன்புமணி மோதலுக்கு பின்னால் பாஜக? நயினார் நாகேந்திரன் பதில்!

அப்போது பேசிய அவர், தான் எத்தனையோ பதவிகளை பார்த்துவிட்டதாகவும், தன்னை தலைவனாக எண்ணவில்லை. தலைமை தொண்டனாகவே இருக்கிறேன், பாமக என்பது யாருடைய தனிச்சொத்தும் இல்லை, தொண்டர்களாகிய நீங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்றும் கூறினார். மனதில் நிறைய இருந்தாலும் பேச முடியவில்லை., என் கடிதம்தான் செல்லும்., நேற்றுதான் எனக்கு விடுதலை கிடைத்தது, இனி எந்த தடைகள் வந்தாலும், உடைத்தெறிந்து முன்னேறுவோம் என்றும் பேசினார்.

இந்த நிலையில், பாமக அலுவலக முகவரியை அன்புமணி ராமதாஸ் மாற்றியுள்ளார். அன்புமணி வெளியிட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பாமக அலுவலகத்தின் முகவரி மாற்றப்பட்டுள்ளது. சென்னை, தி.நகர் தெருவில் உள்ள தனது வீட்டின் முகவரியை கட்சி அலுவலக முகவரியாக அன்புமணி ராமதாஸ் மாற்றியுள்ளார்.
இதையும் படிங்க: ஐயா ராமதாஸ் எவ்வளவு காயப்பட்டு இருப்பார்? பாமகவுல நடக்குறத பார்த்த பாவமா இருக்கு! சீமான் வேதனை..!