சிவகங்கையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு
ஆலோசனைக் கூட்டம் மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர். மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூட்டத்தில் விவசாயிகளின் நலன் எதிர்கால திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முதல் பட்ஜெட் நேற்றைய பொது பட்ஜெட்டில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கு 9624 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கும் வரவேற்கிறோம் பாராட்டுகிறோம் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றிருக்கிறது ஆனால் நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது என்றார்.
விவசாயிகள் அதிகம் எதிர்பார்த்த கடன் தள்ளுபடி தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னது போன்று முழுமையான கடன் அதற்கான அறிவிப்பு வெளியிடவில்லை விரைவில் நல்ல முடிவு செய்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். நிதி நெருக்கடி சூழல் உள்ளது விவசாயிகளின் மீது அக்கறை கொண்டு தள்ளுபடி செய்வர் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் - பாஜக கூட்டு சதி... சி.எம். விஜய் இப்போவாவது வாயைத் திறங்க... போட்டுத்தாக்கிய பி.ஆர். பாண்டியன் ...!
பிற மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதற்கு மூன்று மாதம் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றவர் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவதற்கு கேரள மாநில முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வரை அழைத்திருப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
2022-ல் உச்ச நீதிமன்றம் பேபி அணை பலப்படுத்துவதற்கு வழிகாட்டுதலை வழங்கி, இரு குழுக்களை உருவாக்கி குழு ஆய்வு செய்து அணை வழுவாக இருக்கிறது 152 அடி கொள்ளளவு உயர்த்தலாம் என்று தெரிவித்துள்ள நிலையில் இதற்கு தமிழக முதல்வர் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.
பேபிஅணையை இடிப்பதற்கு கேரள முதலமைச்சர் சதி செயல் செய்வதற்கு தமிழக முதலமைச்சர் அனுமதிக்கக் கூடாது மீறினால் ஐந்து மாவட்ட விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று கூறினார். மண் விற்பனை செய்வதற்கு கனிமவளத்துறை மூலமாக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஆனால் விவசாயிகள் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களை பன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி மறுப்பது வேதனை அளிக்கிறது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார் .
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்கள் மிகப்பெரிய வறட்சி கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறது. எனவே இந்த மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். அதற்கான நிவாரணங்கள் திட்டங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வைகை தூர்வார வேண்டும் ஏரி,குளம் குட்டைகள் பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கடல் நீரை நன்னீராக மாற்றியும், சிட்காட் போன்ற தொழிற்சாலைகளை தரிசு நிலங்களில் உருவாக்கி மதுரையை மையப்படுத்தி தொழில் முதலீடுகளை ஈர்க்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சாகுபடி பரப்புக்கு ஏற்ப விவசாயிகளுக்கு கடன் வழங்க நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றவர்.கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல திட்டங்கள் உள்ளது வரவேற்கதக்கது என்றார்.
தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 3500 கரும்பு டன் ஒன்றுக்கு 4500 விலை நிர்ணயம் செய்யவேண்டும் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று நம்புகிறோம் என்றார்.
காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஆனால் தொடர்ந்து திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். நதிகள் இணைப்பு திட்டங்களை தீவிர படுத்த வேண்டும். வேளாண் திட்டங்களுக்கு தொகை குறைவாக இருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடி விரைவில் நல்ல முடிவு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நிர்வாக ரீதியான உறவு முறை வில் விரிசல் தான் நீர் ஆதார திட்டங்களில் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்தது என்றார்.
இதையும் படிங்க: "கோட் சூட் விவசாயி முதல்வரே"..! கத்தி பட டயலாக்கோடு வானதி சீனிவாசன் தாக்கு..!