தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயையும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியையும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி விமர்சித்துள்ளார். ஒரே மாதிரியான நாக்பூர் ஸ்கிரிப்டை வைத்து விஜய்யும் பழனிசாமியும் மாறி மாறி நாக்கு வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கார்கள் மாறி மாறிப் சென்று சாமி படத்தின் பெருமாள் பிச்சையையே மிஞ்சி விட்டார் பழனிசாமி எனவும் கூறினார். நிதி ஆயோக் கூட்டத்திற்குச் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களைப் போலக் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டு அமித்ஷா வீட்டுக்குப் போனவர் அல்ல எங்கள் முதல்வர் என்றும் எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ ’ஸ்கோப்’ இருக்க, ’பயோஸ்கோப்’ காட்டிக் கொண்டிருக்கிறார் ’சூனாபானா’ எடப்பாடி பழனிசாமி எனவும் விமர்சித்துள்ளார்.

எதற்கும் வருத்தப்படாத இந்த வாலிபர்களை பார்க்கும்போது, ’’ஏய் அங்குட்டு போய் விளையாடுங்கப்பா’’ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் பழனிசாமியின் காமெடி கதறல்கள் காதுகளைக் குளிர வைக்கின்றன என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். முதலில் ’அதிமுக அலுவலகம் பார்க்கப் போனேன்’. பிறகு ’மக்கள் பிரச்னைகளுக்காக அமித்ஷாவை சந்தித்தேன்’ என கலர் கலராக கம்பி மத்தாப்புகளை நீங்கள் கொளுத்திய போது அன்றைக்கு அதிமுக வட்டாரம் அறிவிக்கப்படாத தீபாவளியாக மாறியது என்றும் இப்படி உங்களின் ரீல்கள் அந்து போனதை மறைக்க, பொய்க் குப்பைகளை அள்ளி வீசி, தமிழ்நாட்டை அசுத்தம் செய்ய வேண்டாம் என்றும் ’பில்ட்டிங் ஸ்டராங்க் பேஸ் மட்டம் வீக்’ என்பது போல எழுத்தில் சூரப்புலி என எழுதி விட்டு, செயலில் எலி போல நடந்து கொள்ளும் பழனிசாமியை கண்டு மக்கள் சிரிக்கின்றனர் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி எஜமானுக்கு பணிந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி..! லெப்ட் ரைட் வாங்கிய சேகர்பாபு..!

’பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் தோற்றோம்’ என்று நிர்வாகிகள் அலறித் துடித்த போதும் கூட அவர்களது கருத்துக்களை மதிக்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தன் உறவினர்களை காப்பாற்றத்தானே! தவழப்பாடியாரின் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் ’ஒய்யால என்ன மாதிரி கூவுறான்’ என்பது போல பழனிசாமியின் கண்ணீர் நன்றாகப் புரிகிறது., தன்னுடைய மகன் மிதுனும் தன் உறவினர்களும் தப்பிக்கக் கட்சியைப் பலிபீடத்திற்குக் கொண்டு வந்த புண்ணியவான் தான் பழனிசாமி. அதிமுகவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் விரோத திட்டங்களை கைவிடுங்கள்..! ஜூன் 2ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!