தமிழக சட்டமன்றத் தேர் தலை முன்னிட்டு மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் தனியார் கல்லூரி மைதானத்தில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் (கிள்ளியூர் தொகுதி) ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட் (குளச்சல் தொகுதி), பிரவீன் (விளவங்கோடு தொகுதி), தி.மு.க. வேட்பாளர்கள் மகேஷ் (கன்னியாகுமரி தொகுதி, ஆஸ்டின் (நாகர்கோவில் தொகுதி) மற்றும் பத்மநாப்புரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்லசுவாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தவர் கூட்டத்தில் பேசும்போது,
சிவகாசி பட்டாசு தொழில்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்த 23 தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்த கடைமைப்பட்டுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன் வரலாற்று சிறப்பு மிக்க எனது பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவு செய்தேன். என் யாத்திரையின் முக்கிய நோக்கம் நாடுமுழுவதும் மக்களிடம் ஒற்றுமையை விதைப்பதுதான். பல்வேறு மதங்கள், பல்வேறு சாதிகள், பல்வேறு பண்பாடுகள், பல்வேறு கலாசாரங்கள் உள்ளன. ஒருதாய் மக்களாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான் யாத்திரையின் நோக்கமாக இருந்தது. நாங்கள் பிரிவினை வாத அரசியலை வளர்க்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் எதிர் போராடும் அரசியலை முன்னெடுக்கிறோம். எங்களை பொறுத்தவரை இந்தியா மாநிலங்களின் ஒன்றியம். அரசியல் சாசன சட்டம் அப்படித்தான் அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: அனல் தெறிக்கும் அரசியல் களம்... இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி தமிழகம் வருகை... எங்கெல்லாம் பரப்புரை?
பல்வேறு மக்களின் மொழி, கலாச்சாரங்களை போற்றி பாதுகாக்கும் விதமாக அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஒரு மாநிலம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் எங்களுக்கு முக்கியமானதுதான். இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழிக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழியும் இலக்கிய பொக்கிஷம். தமிழ்மொழிக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு. அதுபோன்று பஞ்சாபி, உ.பி, வடகிழக்கு, கர்நாடகா, மஹாராட்டிரா மாநிலங்களில் பேசப்படு ஒவ்வொரு மொழிக்கும் பெரிய கலாச்சாரம், பண்பாடு, வரலாறு உண்டு. ஒரு தனிப்பட்ட மொழியின் பண்பாடோ கலாச்சாரமோ சிதைக்கப்படாமல் பாதுக்காக்கப்பட வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களும், அந்த மாநிலத்தை சார்ந்தவர்களால் ஆளப்பட வேண்டும். ஒவ்வருடைய குரலும் ஒலிக்கப்பட வேண்டும்.
ஆனால், பாஜக ஒரே நாடு, ஒரு மொழி, ஒரு வரலாறு, ஒரு பண்பாடு என அனைத்தையும் ஒற்றை அரசியலுக்குள் அடக்க நினைக்கிறது. இதுதான் எங்களுக்கும், அவர்களுக்குமான கள வித்தியாசம். தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும். தமிழக ஆண்களும், பெண்களும் தமிழகத்தை ஆள வேண்டும். ஒவ்வொரு மாநிலங்களும் அந்த மாநில நிர்வாகத்தை நடத்த வேண்டும். நம் அரசியல் அமைப்பும் அதைத்தான் சொல்கிறது. அரசியல் சாசன சட்டத்தை பாஜக ஏற்றுகொள்ள வில்லை. மாநில கூட்டாட்சி தத்துவத்தை பாஜக பலவீனப்படுத்தப்ப்பார்க்கிறது. தமிழ்நாட்டை தமிழ்நாட்டில் இருந்து ஆள வேண்டும் என நினைக்கிறோம். மணிப்பூர் அமைதியான மாநிலம். அங்கு தீயை பற்றவைத்து அங்கு கொளுந்துவிட்டு எரிகிறது. மணிப்பூர் சின்னாபின்னமாக்கப்பட்டதற்கு பஜக தான் காரணம். எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கு அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டு டெல்லியில் இருந்து ஆளப்பார்க்கிறார்கள். தமிழ் மக்களிடம் அதை நேரடியாக சொல்ல தைரியம் இல்லை.
அதற்காக தமிழகத்தில் பெரிய வரலாற்றைக் கொண்ட இயக்கைத்தை கைப்பற்றி உள்ளனர். அதிமுக தமிழக வளர்ச்சியில் பெரிய பங்காற்றி உள்ளது என்பதை மறுக்கவில்லை. அதிமுகவை தமிழகத்தை பிரதிநிதித்துவம் படுத்திய தலைவர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். இன்று அதிமுக வெற்றுக்கூடாரமாக மாறி உள்ளது. அதிமுக பாஜக தமிழகத்தில் நுழையும் கருவியாக மாறிவிட்டது. அதிமுக தற்போதைய தலைவர்கள் ஊழலில் திழைத்த காரணத்தால் மோடி அரசிடம் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டனர். தமிழத்தை பினாமிகளை வைத்து தமிழகத்தை ஆள ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் மோடியை ஆட்டுவிப்பது போன்று மோடி எடப்பாடியைகைவசபடுத்தி ஆட்டுவிக்கிறார். வீரமான தமிழர்கள் அவர்களை ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சரணடையமாட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ்க்கு தெரியும் என்பதால் அதிமுக மூலம் கால்பதிக்க முயல்கிறார்கள்.
ஆனால் நாங்கள் கூட்டணி வைத்துள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாப்பத்தில் உறுதியாக உள்ளோம். சில நாட்கள் முன் மோடி பாராளுமன்றத்தில் ஆபத்தான காரியத்தை செய்தார். மகளிருக்கான இட இதுக்கீட்டை வழங்க போவதாக நாட்டு மக்களிடம் சொன்னார். அவரது உண்மையான எண்ணம் நாட்டடின் தேர்தல் கட்டுமானத்தை சிதைப்பதுதான் அவர் மனதில் இருந்த சதித்திட்டம். இட ஒதுக்கீட்டுக்குப்பின்னால் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் அனைத்து தொகுதிகளையும் மாற்றி அமைக்க முயன்றார். அவர் தென் மாநிலத்தில், வடகிழக்கு மாநிலத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைக்க நினைத்தார்.
அவரது உண்மையாக நோக்கம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், வடகிழக்கு மாநிலங்களில் பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என நினைத்தார். அவர் தேச விரோத செயலை செய்ய நினைக்கிறார். ஒன்றுபட்ட இந்தியாவை சிதைக்க நினைக்கிறார். அதனால்தான் அதை பாராளுமன்றத்தில் தோற்கடித்தோம். இனி எந்த காலத்திலும் சிதைக்க முயன்றால் ஒவ்வொரு முறையும் தோற்கடிப்போம். தமிழ்நாடு இந்தியாவுக்கு முற்போக்கு பார்வையை தந்துள்ளது. உங்கள் அரசியல் வரலாற்றுப்பூர்வமாக சமூக நீதியில் கால்பதித்துள்ளது. தமிழ்நாடில் மதிய உணவு திட்டம், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நான் மிக மகிழ்ச்சியாக சொல்கிறேன். திமுகவும் ஸ்டாலினும் இந்த பணிகளை இன்னும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்கிறேன்.
இதையும் படிங்க: நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!