இன்று தைலாபுரம் தோட்டத்திலிருந்து சென்னை வந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய மகனுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாமகவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு திமுகதான் காரணம் என அன்புமணி தொடர்ந்து பேசி வருகிறார் என்ற கேள்விக்கு, இது அப்பட்டமான பொய் என்ற பதிலை தெரிவித்திருக்கிறார்.

அன்புமணி மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துகிறார் என்ற கேள்விக்கும் அவர் அவரவர் வேலையை அவரவர் செய்கிறார் என்றார். அன்புமணி ராமதாஸ் மேடையில் தந்தையிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருக்கிறார். உங்களிடம் நேராக கேட்க வேண்டுமா என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கும், போக போக தெரியும் என பாடல் பாடி ராமதாஸ் அதற்கு பதிலளித்தார். ராமதாஸ் சென்னை வந்திருப்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.3,000 வேண்டாம்.. ரூ.1500-ஆக குறையுங்க.. புதிய 'பாஸ்டேக்' அறிவிப்புக்கு ராமதாஸ் கருத்து..!

மீண்டும் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே ஒரு சமாதான பேச்சு வார்த்தை நடத்துவதற்காக சென்னை வந்திருக்கிறாரா என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. பாமகவினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் ஜி.கே.மணி மற்றும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதெபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் மருமகன் பரசுராமன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் ஆவார். அவர்களைச் நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவே ராமதாஸ் சென்னை வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்த ஓபிஎஸாக அவதாரம் எடுக்கப்போகும் சிவி சண்முகம்... அன்புமணி மிஸ் ஆனதால் அடிக்கப்போகும் ஜாக்பாட்...!