முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனையான காவேரி பிரச்சனையை நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், காவேரி ஒழுங்குமுறை குழு, காவிரி மேலாண்மை ஆணையம் என எந்த சட்டபூர்வ அமைப்பையும் மதிக்காமல் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்ற கர்நாடகா அரசின் செயல்பாடு ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கவலை அளிக்கிறது.
தமிழகத்தினுடைய 12 மாவட்டங்களில் உள்ள சுமார் 21 லட்சம் ஏக்கர் விளை நிலங்களும் , 120க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும், அதோடு 21 மாவட்டங்களில் உள்ள 5.5 கோடி மக்களும் குடிநீருக்காக காவிரி தாயைத்தான் நம்பி இருக்கின்றோம்.
ஏற்கனவே ஒப்பந்தங்களில் மீறி காவேரியின் குறுக்கே நான்கு அணைகளை கட்டிய கர்நாடக அரசு, இப்போது மேகதாது அணை கட்டி மொத்தமாக காவேரியை முடக்கி போட துடிக்கிறது அதற்காக தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருவது நமக்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது.
இதையும் படிங்க: பட்டை நாமமா? மொட்டையா? - பட்ஜெட்டில் மக்களுக்கு என்ன தரப்போகிறார் விஜய்... ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு கடந்த ஜூனியில் தமிழகத்திற்கு தர வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரையும், ஜூலையில் தரவேண்டிய 31.24 டிஎம்சி தண்ணீரையும் உரிய நாட்களிலே. கர்நாடகா அரசு திறந்து விடவில்லை அதனால் குறுவை சாகுபடி இன்றைக்கு பொய்து போய்விட்டது.
இந்த சூழ்நிலையிலே ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்கு முறையை குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உத்தரவு இட்டது அந்த உத்தரவுக்கு கொஞ்சமும் செவிசாய்க்கவில்லை கர்நாடகா அரசு. ஆனால் தற்போது கனமழை பெய்து அணைகளில் அங்கே நீர் நிரம்பிய பிறகு கர்நாடகா அரசு தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, தற்காத்துக் கொள்வதற்காக சுமார் 12,000 கன அடி தண்ணீரை கர்நாடகா அரசு தங்களுக்கான வடிகாலாக தமிழகத்தை பயன்படுத்துகிற ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
மேலும் கர்நாடகத்தில் கொள்கை வேறுபாடுகளை மறந்து ,அனைத்து கட்சிகளும் ஒற்றைக் கருத்துடன் ஓர் குரலாக ஒலிக்கின்றன. நாடாளுமன்றத்திலும் ஒரே குரலில் தங்கள் மாநிலத்திற்கான உரிமையை பற்றி பேசி வருகிறார்கள். அந்த ஒற்றுமையின் வாயிலாக அத்தனை அதிகார மையங்களையும் எளிதாக அவர்தான் எதிர்க்க முடிகிறது.
ஆனால் காவேரி பிரச்சனையில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கின்ற நிலையிலும், தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த முதல்வர் விஜய் தலைமையிலே த.வெ.கஅரசு ஒருங்கிணைக்க தவறிவிட்டதோ என்பது நமக்கு கவலை இருக்கிறது.
இப்போதும் ஒன்றும் தலைமுழுகி போகவில்லை, விஜய் காவேரி பிரச்சனையில் வெளிப்படை தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. அனுபமிக்க அரசியல் கட்சி தலைவர்களையும், தலைசிறந்த சட்ட நிபுணர்களின் கலந்து ஆலோசித்து நம்ம முதல்வர் செயல்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிடத்தில் எழுந்திருக்கிறது.
அதை விட்டுவிட்டு வழக்கம் போல கடிதம் எழுதுவதாகவும், பேச்சுவார்த்தை நடத்துகிற என்று எடுக்கிற முயற்சி நமக்கான உரிமையை ஒருக்காலும் பெற்றுத்தர முடியாது . சட்டபூர்வமான கள யதார்த்தத்தை முதல்வர் விஜய்க்கு யார் எடுத்துச் சொல்வது, உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி தமிழக அரசு ஒற்றை குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது .
ஏனென்றால் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள், களப்போராட்டங்கள், சட்ட போராட்டங்களுக்கு பின் காவேரி நடுவர் மன்ற தீரவிசாரித்து இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து இருக்கிறது. ஆனால் கர்நாடகா அரசுஎந்த உத்தரவையும் பொருட்படுத்தாமல், எந்தத் தீர்ப்புக்கும் கட்டுப்பட மாட்டோம் என உச்ச நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் செயல்படும் கர்நாடகா அரசு, அதே உச்ச நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியாக தான் நாம் தீர்வு காண முடியும் என்பது எல்லோரும் அறிந்தது.
இரு மாநிலங்களுக்கு இடையான இந்த ஜீவாதார பிரச்சனையில் மத்திய அரசு நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் ஒற்றுமையாக இருந்து அழுத்தம் தந்தால் தான் அது சாத்தியமாகும். தமிழகத்திற்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியிடம் நாம் ஒற்றுமையாக இருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது .
தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் இதே நிலை தொடர்ந்தால் தமிழகம் மிகப்பெரும் பொருளாதார வாழ்வியல் சிக்கல்களை காண நாம் சந்திக்க வேண்டி வரும் என்பதை விஜய் தலைமையிலான த.வெ.கஅரசு உணர வேண்டும். தமிழகம் பாலைவனமாக மாறும் அதனால் பஞ்சம் ஏற்படும் அதனால் பேர்இழப்பும் ,பேரழிவும் ஏற்பட்டு பல தலைமுறைகளை பாதிக்கும் என்பதை முதல்வரின் விஜய்யிடம் நம்பிக்கை கூறிய ஆலோசகர்கள் நட்பு வட்டாரத்திலே எடுத்துச் சொல்ல முன்வர வேண்டும்.
தற்போது வரும் காவிரி உபரி நீரை வைத்துக்கொண்டு நமக்குத்தான் இப்போது தண்ணீர் வந்து விட்டதே என்று இனி எந்த பிரச்சனையை முறையாக சட்டரீதியாக எடுத்துச் செல்லவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய ஆபத்தை தமிழகம் என்று நோக்கும் இது பயமுறுத்தல் அல்ல இது ஒரு எச்சரிக்கை.காவிரி தமிழகத்திற்கான உரிமையை மொத்தமாக கைவிட்டு போய்விடும் என்பதை நாம் உணர வேண்டும். இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிற காவிரி பிரச்சனையை உடனடியாக தீர்வு காண வெறும் வசீகர வசனத்தை நம்ம முதல்வர் பேசிவிட்டு செல்லக்கூடாது.
பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதல்வர் விஜய், 50 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் எடப்பாடியார் சொன்னது போல அனைத்து கட்சியை கூட்ட ஆலோசனைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வாரா நம்ம முதல்வர் விஜய் எதிர்பார்த்திருக்கிறது இருக்கிறது தமிழகம் .
இது போன்ற தமிழகத்தின் உயிர் நாடியான காவிரி, முல்லைப் பெரியார், கச்சைதீவு ,பாலாறு போன்ற ஜீவாதார உரிமை பிரச்சனைகளை அதன் முன்னேற்றம் குறித்து நேரிலேயே விளக்கம் தர முன்வந்தால் தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமையும்.
அதை விடுத்து உயிர்நாடி பிரச்சினைகளில் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது விஜய் தொடர்ந்து மௌனம் காப்பது மக்களை அவமதிப்பது போல உள்ளது .
காவிரி பிரச்சனையில் தங்களின் தலைமையிலே சட்டபூர்வமான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தமிழகம் எதிர்பார்க்கலாமா? பொறுத்திருந்து பார்ப்போம் காவிரி உரிமைக்காக விஜய் தலைமையிலான தவெகஅரசு எடுக்கிற முன்னெடுப்புகளுக்கு நிச்சயமாக ஒற்றுமையோடு உரத்த குரலிலே உரிமையை நிலைநாட்ட தமிழகம் தயாராக இருக்கிறது. தமிழக முதல்வர் விஜய் தயாராக இருக்கிறாரா? என கேள்வி அனுப்பினார்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் நட்பு வட்டாரங்களுக்கு அரசு பணி... விஜயின் சஸ்பென்ஸ் பட்டியலை உடைத்த ஆர்.பி.உதயகுமார்...!