தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிற்கு பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் குறிப்பாக பெண்களுக்கான திட்டம் விடியல் பயண திட்டம் தான். இந்த திட்டத்தின் கீழ் அரசு கட்டண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும். இந்த விடியல் பயணம் திட்டத்தால் தமிழகத்தை சேர்ந்த பல லட்சம் பெண்கள் பயணடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ மகாராஜன் ‛விடியல் பயணம்' திட்டம் தொடர்பாக பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், நாங்க ஆட்சிக்கு வந்தாச்சினா.. என்னென்ன சொன்னோம்.. மக்களே கஷ்டப்படாமல் 4 மணிவரை வேலை செய்யுங்கள். அதன்பிறகு ஓசியாக பஸ்சில் போங்க.. தேனிக்கு போங்க.. ஆண்டிபட்டிக்கு போங்க.. உசிலம்பட்டிக்கு போங்க.. ஆம்பளை ஆளுங்க எல்லாம் வீட்டில் சோறாக்குங்கனு சொல்லிட்டு போனோம்.. இப்போ அதேமாதிரி போய் வறீங்களா?. 3 ஆண்டுகளாக எவ்வளவு வேலை நடந்து இருக்கு.. இப்போது இந்த ரோடு போடப்போகிறோம். இதில் பஸ் விடப்போகிறோம். அதிலும் ஓசியாக தான் ஏறிப்போகப்போறீங்க.. அன்னைக்கு என்ன சொல்ல போறீங்கனு தெரியலை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

திமுக எம்எல்ஏ மகாராஜனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பொன்முடி, ‛‛ஓசி'' என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். மகளிருக்கான ‛விடியல் பயணம்'திட்டம் பற்றி அவர்மேடையில் பேசியபோது, ‛‛நீங்கள் எல்லாம் எப்படி பஸ்சில் போகிறீர்கள்.. ஓசி'' என்று பேசியது தொடர்பான வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பொன்முடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தனது வட்டார வழக்கில் இப்படி பேசிவிட்டதாக கூறி பொன்முடி வருத்தம் தெரிவித்தார்.

இருப்பினும் பொன்முடியின் அந்த பேச்சு என்பது திமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து பொன்முடி சர்ச்சையில் சிக்கி வந்தநிலையில் தற்போது அவரிடம் இருந்து அமைச்சர் பொறுப்பு மற்றும் கட்சி பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் பறித்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், பெண்களுக்கான ‛விடியல்பயணம்' திட்டம் பற்றி ஓசி என்று கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
இதையும் படிங்க: ராமர் குறித்த சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு வந்த புதிய சிக்கல்!!