கீழடி அகழாய்வு அறிக்கையில் போதுமான ஆய்வுத் தகவல்கள் இல்லையென மத்திய அமைச்சர் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கீழடி அகழாய்வு குறித்த ஆய்வுகளை அரசியல் ஆக்காமல், மேலும் அறிவியல் பூர்வமான தரவுகளைச் சேகரிப்பதில் மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என என மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் வலியுறுத்தியுள்ளார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ, எம்.பி.சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் மத்திய அரசை கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழின் தொன்மையை நாங்கள் அறிந்திருக்கிறோம். நான் அடிக்கடி சொல்றேன் தமிழ் எனது பெயரில் மட்டுமல்ல உயிரை மட்டும் உயிரிலும் இருக்கிறது. ஆக இதை அறிவிக்கும் போது இது அறிவியல் பூர்வமான தகவல் வரட்டும், அதை நாங்கள் அறிவிக்கிறோம் என்று மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் சொல்லும்போது பக்கத்தில் இருந்தது சரி என்றுதான் நாங்க சொன்னோம். ஆனா அதுக்கு நீங்க அது பக்கத்துல இருக்கறீங்கள, உங்களுக்கு அறிவு இருக்கா? என விமர்சிக்கிறார்கள்.

இன்னைக்கு குள்ள நரி, அந்த நரி, இந்த நரி, தமிழ்ல ரொம்ப பெருமையான வார்த்தைகளை ட்விட்டர்ல பயன்படுத்தியிருக்கீங்க. தமிழுக்கு பெருமை சேர்க்கிறோம் கீழடியிலன்னு சொல்லிக்கிட்டு, எந்த உள்ளடியும் இல்லாத கீழடியில் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி, உங்களுக்கு மட்டும்தான் தமிழில் ஆர்வம் இருப்பது போல் காட்டிக்கொள்கிறீர்கள்.

இப்படித்தான் நீங்கள் தமிழை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் எல்லாம் தமிழுக்கு மகுடம் சூட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறுபடியும் சொல்லிக் கொள்கிறேன். இந்த கீழடியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். அதை வைத்துதான் நீங்கள் தமிழ் ஆர்வலர்கள், தமிழுக்கு நீங்கள் தொண்டு செய்வீர்கள். ஆனால் நாங்கள் அதற்கு மேலே தொண்டு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நான் இங்கே தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: #BREAKING: சொல்லெண்ணா துயரம்.. 241 உயிர்களும் பறிபோனது.. ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இதையும் படிங்க: ராட்சத தூண்கள் சரிந்து விபத்து... பறிபோன உயிர்... சென்னையில் நிகழ்ந்த துயர சம்பவம்!!