முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக பங்கேற்றது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிக ஒன்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் குறித்து சீட் பேரம் பேசுவதற்காக உருவாக்கவில்லை. ஒரு நாள் தேர்தல் பாதை தேவை இல்லை என்று கூட முடிவு செய்வேன்.

புண்ணியம் கிடைக்க வேண்டும் என விபூதியை நான் பூசிக்கொள்ளவில்லை, அவமதிக்க வேண்டும் என நான் அதை அழிக்கவில்லை. எனது தாய்க்கு என்ன மதிப்பை கொடுக்கிறேனோ, அதையே என்னுடைய மக்களுக்கும் தருகிறேன். முருகன் தமிழ் கடவுள் என்றால் அவரது தந்தை சிவனும் தமிழன் தானே, தாய் பார்வதி தமிழச்சி தானே. எனவே சிவன் வாழ்ந்த கைலாய மலை தமிழர்களுக்கு சொந்தம்.
இதையும் படிங்க: “இந்து என்ற மதமே கிடையாது.. யார் அதை உருவாக்கியது”; இந்துக்கள் மனதில் தீயைப் பற்ற வைத்த திருமா...!

என்றால் இந்தியா முழுவதுமே தமிழனுக்குதான் சொந்தம். முருகனை தமிழ் கடவுள் என்பவர்கள் விநாயகரை ஏன் தமிழ் கடவுள் என சொல்வதில்லை? அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை.. அப்படி இருந்திருந்தால் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டிருக்குமா..?

ஆனால் அ.தி.மு.க. பங்கேற்றது அதிர்ச்சி அளிக்கிறது. இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்து மதம் வந்தது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது. இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது. அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!