தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, மக்களிடம் சென்று வாக்கு கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முழுமையாக ஓய்ந்தன. இந்த நிலையில் விதிகளை மீறி பரப்புரை செய்ததாக தமிழக வெற்றிக்கழகம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரை செய்கிறார்கள் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல்..! ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகள்..! தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!
விதிகளை மீறி இணையதளத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதாக தமிழக வெற்றிக்கழகம் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரை முடிந்த பின்னரும் சமூக வலைதளங்களில் பரப்புரை மேற்கொள்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதை வீடியோவை எடுத்து ஆன்லைனில் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக வெற்றி கழகத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரம்..!!