தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் முக்கிய சார் இணைப்பில் வந்தமைக்கு நன்றி. பெரும்பான்மை மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து மதசார்பின்மையை காக்க விஜய்க்கு ஆதரவு எனக்கூறி விசிலுடன் கை கோர்த்திருக்கிறது காங்கிரஸ். தேர்தலுக்கு முன்பே திமுக காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு உறவுச் சிக்கல்கள் இருந்தது. விஜய்யே ஒரு கட்டத்தில் உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் என்கிற வார்த்தையை பிரயோகப்படுத்தினார். ராகுல் காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரம் வந்தபோது முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு பிரச்சார கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. அப்பொழுது இருந்தே அங்கு மனக்கசப்புகள் நீருபூத்த நெருப்பாக இருந்து கொண்டுதான் இருந்தது.
இதனை எல்லாம் மனதில் கொண்டே தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்திருக்கிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் வைத்து வந்த ஆட்சியில் மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் எல்லாவற்றையும் சேர்த்து காங்கிரஸ் தவெக கூட்டணி தொடரும் என உறுதியளித்துள்ளது. கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளிலேயே ஆட்சி அமைக்கும் அளவிற்கு தவெக உயர்ந்துள்ளது. இதனால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை நன்றாக வளர்ச்சி அடைய வைக்கலாம். இளைஞர்கள் மத்தியில் கட்சியை கொண்டு போக முடியும் போன்ற கணக்குகளை போட்டு தான் ராகுல் காந்தி இந்த முடிவெடுத்துள்ளார்.
மேலும் ஆட்சியில் பங்கு என்ற கொள்கையை திமுக மறுத்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு தர முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைமையில் அமைய உள்ள அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது. அப்படி தவெக ஒதுக்கீடு செய்யவுள்ள அமைச்சரவைக்கு பெண் ஒருவரை நியமிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே பெண் எம்.எல்.ஏ.வான தாரகை கத்பர்டிற்கு வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: #BREAKING: விசிலோடு சேர்ந்த கை..! விஜயை சந்தித்து முழு ஆதரவை கொடுத்த காங்கிரசார்..!!
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 62,210 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து தவெக வேட்பாளர் பிரேம் அலெக்ஸ் 59,906 வாக்குகளுடனும், பாரதிய ஜனதா வேட்பாளர் சிவகுமார் 51,630 வாக்குகளுடனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனி ஷோபா 11,791 வாக்குகளுடனும் முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சி..! விஜயுடன் டிஐஜி தர்மராஜன் முக்கிய ஆலோசனை..!