தமிழக வெற்றிக்கான தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகவும், இதனால் ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காத நிலையும் நீடித்து வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது பெரும்பான்மையின் நிரூபித்த பின்னரே பதவி ஏற்க முடியும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை என்றும் இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்., பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார் என்றும் அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன் எனவும் தெரிவித்தார். இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ள கமல்ஹாசன் இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல் என்று தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டுள்ளார் இது மாநிலத்திற்கு நேரும் அவமானம் என்றும் மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 180 சீட்டு ஜெயிச்சிருக்கணும்! தோத்ததே இவரால தான்! செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி!
பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லி இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கும் கமல்ஹாசன் நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல., ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும் என்றார்.
இதையும் படிங்க: தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் மாபெரும் போராட்டம்.! மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை..!