தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று, நடிகர் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், மாநில அரசியல் அரங்கில் புதிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அவற்றில் ஒன்று, தமிழ்நாட்டில் மீண்டும் சட்ட மேலவையை கொண்டு வரும் திட்டம். இது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற ஒரு அமைப்பு.
இந்திய அரசியலமைப்பின்படி, சில மாநிலங்களில் இரு அவைகள் கொண்ட சட்டமன்ற அமைப்பு உள்ளது. இதில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற மன்றம் கீழவை ஆகும். சட்ட மேலவை மேலவையாக செயல்படுகிறது. இது மாநிலங்களவை (Rajya Sabha) போன்று செயல்படும் நிரந்தர அமைப்பு. முழுமையாக கலைக்கப்படாது. உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஓய்வு பெறுவார்கள்.

இந்திய அரசியலமைப்பின் 169-வது பிரிவின்படி, மாநில சட்டமன்றம் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றினால், நாடாளுமன்றம் சட்டம் இயற்றி மேலவையை உருவாக்கலாம். உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும், ஆனால் குறைந்தபட்சம் 40 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரா, பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது.
இதையும் படிங்க: தவெகவிற்கு ஆதரவா..? முக்கிய முடிவுகள்... இன்று காங்கிரஸ் விவகாரக்குழு கூட்டம்..!
இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்ததும் சட்ட மேலவை கொண்டுவர திட்டம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆட்சி அமைந்ததும் சட்ட மேலவையை கொண்டு வருவதற்கான நடைமுறைகள் குறித்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆட்சி அமைந்ததும் சட்ட மேலவையை கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், மாநில சட்டமன்றம் அனுப்பும் தீர்மானத்தின் அடிப்படையில் நாடாளுமன்றம் முடிவு எடுக்கும் என கூறப்பட்டுள்ளது. மாநில சட்டமன்றம் அனுப்பும் தீர்மானத்தின் அடிப்படையில் நாடாளுமன்றம் முடிவு எடுக்கும்.
இதையும் படிங்க: விஜய்க்கு அடுத்த பேரிடி... 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக முக்கிய நிர்வாகி கைது...!