வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: "இன்னைக்கு வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு வந்து நம்முடைய வெற்றி வேட்பாளர், தலைவர் அவர்கள் உங்களிடத்தில ஒப்படைச்சிருக்காங்க, அண்ணன் கார்த்திகேயன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்துல நீங்க எல்லாம் வாக்களிக்கணும்னு உங்களைத் தேடி நாடி நான் வந்திருக்கிறேன்.
ஆனா இங்க வந்து பார்த்து உங்களுடைய எழுச்சியெல்லாம் பார்க்கும்போது நீங்க ஏற்கனவே முடிவு பண்ணிட்டீங்க, வெற்றியை டிசைட் பண்ணி வச்சிட்டீங்க, கரெக்டா?, என்ன முடிவு பண்ணி வச்சிருக்கீங்க? கைய உயர்த்தி காட்டுங்க, என்ன சின்னம்? உதயசூரியன் சின்னத்துல அண்ணன் கார்த்திகேயன் அவர்களுக்கு மிகப்பெரிய வாரியான வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்க வைக்கணும். செய்வீங்களா?
இதையும் படிங்க: அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்... எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!
போன முறை போன சட்டமன்றத் தேர்தல்ல அண்ணன் கார்த்திகேயன் அவர்களை கிட்டத்தட்ட 10,000 வாக்கு வித்தியாசத்துல நீங்க ஜெயிக்க வச்சிருக்கீங்க. இந்த முறை மினிமம் குறைந்தது 25,000 வாக்கு வித்தியாசத்துல உதயசூரியன் சின்னத்தை நீங்க ஜெயிக்க வைக்கணும். செய்வீங்களா?, நிச்சயம் செய்வீங்களா? என கேள்வி எழுப்பினார்.
வருகின்ற 23-ஆம் தேதி, இன்னைக்கு தேதி 1. 23-ஆம் தேதி தேர்தல். இன்னும் நம்ம கைகள்ல 22 நாட்கள் இருக்கு. 22 இங்க இருக்கிற அத்தனை பேரும் முடிவு பண்ணிட்டீங்க உதயசூரியன் சின்னத்துல அண்ணன் கார்த்திகேயனுக்கு வாக்களிச்சு மிகப்பெரிய வெற்றி கொடுக்கணும்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க.
நான் கேட்பதெல்லாம், உதயநிதி வந்தாப்பல, போய் பார்த்தோம், பேசினாரு, கிளம்பி போயிட்டாரு, கலைஞ்சு போயிட்டோம்னு இருக்கக்கூடாது. அடுத்த 22 நாட்கள் இந்த பிரச்சாரத்தை ஒவ்வொருத்தரும் ஏன் திமுக-வுக்கு வாக்களிக்கணும், ஏன் கார்த்திகேயனுக்கு வாக்களிக்கணும், ஏன் உதயசூரியன் சின்னத்துல வாக்களிக்கணும், ஏன் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கணும், ஏன் நம்முடைய தலைவர் மீண்டும் முதலமைச்சரா உட்காரணும்ங்கிற பிரச்சாரத்தை நீங்க ஒவ்வொருத்தரும் அடுத்த 22 நாள் செய்யணும், செய்வீங்களா? என்றார்.
அப்படி செஞ்சா நிச்சயம் போன முறையை விட அதிகமான வாக்கு வித்தியாசத்துல அண்ணன் கார்த்திகேயன் அவர்களை நாம வெற்றி பெற வைக்கணும். செஞ்சு காட்டுவீங்களா?. நான் மூணு நாளா தமிழ்நாடு முழுக்க சுத்திக்கிட்டு இருக்கேன். உதயநிதி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த மக்கள் அவர் பேசுவது கேட்கவில்லை என கூறினர். பின்னர் மற்றொரு மைக்கை வாங்கி உதயநிதி தொடர்ந்து பேசினர், அப்போது என்னது எதுவுமே கேட்கலையா? நான் பேசுனது கேட்டுச்சா? என்னம்மா இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுற... இப்போ கேட்குதா? மறுபடியும் முதல்ல இருந்து பேசணுமா? ராக் பண்றீங்களா? என நகைச்சுவையாக கேட்டு விட்டு தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார்.
இதையும் படிங்க: நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட உதயநிதியின் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு... சிக்கியது என்ன?