எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன. திமுக நிர்வாகிகள் எனக் கூறப்படும் தரப்பினரின் தகவலின்படி, கைது நடவடிக்கையின் போது உதயநிதிக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் உடன் இல்லை என்றும், கட்சியின் மூத்த நிர்வாகிகளே முழு நேரமும் துணையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு, அவரை நேரடியாக சந்திப்பது கட்சி நிர்வாகிகளுக்கு எளிதானதாக இல்லை எனவும், அவரைச் சுற்றி நெருங்கிய நண்பர்கள் குழு எப்போதும் இருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துணை முதல்வராக இருந்த காலத்திலும் அதே நடைமுறை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், உதயநிதியை சந்திக்க வந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முக்கிய பொறுப்பாளர்களும் பல நேரங்களில் உரிய மரியாதை பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அந்த வட்டாரங்களில் முன்வைக்கப்படுகின்றன. சில முக்கிய மூத்த தலைவர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டதாகவும், முடிவெடுப்பதில் நெருங்கிய நண்பர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டபுள் மீனிங் பேச்சு..! இதெல்லாம் வேணாம் உதய்..!! திருமாவளவன் அறிவுரை..!!

இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்ட உதயநிதி, சென்னை முதல் தஞ்சாவூர் வரை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மீண்டும் சென்னை திரும்பியதாக தகவல்கள் வெளியாகின. இந்த முழு நேரத்திலும், வழக்கமாக அவருடன் காணப்படும் நண்பர்கள் யாரும் உடன் இல்லை என்றும், மாறாக கட்சியின் மூத்த நிர்வாகிகளே அவருக்கு ஆதரவாக இருந்து தேவையான உதவிகளை செய்ததாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அனுபவம் மூலம் அரசியல் பயணத்தில் கட்சித் தொண்டர்களும், மூத்த நிர்வாகிகளும் தான் முக்கிய பலமாக இருப்பதை உதயநிதி உணர்ந்திருக்கலாம் என்றும், நெருக்கமான நண்பர்கள் அந்நேரத்தில் உடன் இல்லாதது குறித்து அவர் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
எனினும், இந்த தகவல்கள் திமுக வட்டாரங்கள் தெரிவித்ததாக வெளியாகியுள்ளன. இதுகுறித்து உதயநிதி அல்லது திமுக தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: "பொதுமக்களை தாக்கும் திமுகவினர்"..! சட்டம் கடமையைச் செய்யும்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!