சென்னையில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ் அவர்கள் திமுகவில் இணைந்த அதன் மூலம் திமுகவிற்கு மட்டுமல்ல அதன் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம். அவருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற முயற்சியை அவர் மேற்கொண்டார் என்பதை நாம் அறிவோம். குறிப்பாக எடப்பாடியோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற முயற்சியை மேற்கொண்டார் அது நிறைவேறாத நிலையில் அவர் பாஜகவில் போய் சேர நினைக்காமல் திமுகவில் சேர்ந்து இருக்கிறார் என்பது அவர் மீதான நன்மதிப்பை மேலும் உயர செய்திருக்கிறது. அவர் திராவிட பாரம்பரியத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களோடு பணியாற்றி வளர்ந்தவர். பாரம்பரியத்தை அத்தகைய பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் வலதுசாரி அமைப்புகளோடு தன்னை இணைத்துக் கொள்ளாமல் மீண்டும் அதே திராவிட பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது.
பிரதமர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வது குறித்த கேள்விக்கு, பிரதமர் போகின்ற எல்லா மாநிலங்களிலும் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கமான ஒன்றுதான். இந்த வகையில் அவர் திருப்பரங்குன்றம் முருகனை தரிசிப்பது நமக்கு மகிழ்ச்சி. ஆனால் பாஜகவின் அரசியல் எட்டு களில் இதுவும் ஒன்று என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இதையும் படிங்க: 12 தொகுதி கேட்கும் விசிக! காங்கிரசை தொடந்து போர்க்கொடி!! திமுக கூட்டணியில் தீராத தலைவலி!!
மக்களிடம் இயல்பாக உள்ள மத உணர்வுகளை தம்முடைய அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை பலப்படுத்துவது என்பது அவர்களின் வாடிக்கையான போக்கு. முருகனை தரிசிக்க பிரதமர் வருகிறார் என்பதை விட இந்து சமூகத்தினரின் மீது தனக்கு பேரளவில் அன்பு இருக்கிறது என்பதை காட்டுகின்ற தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான பாட்டை அவர் உறுதிப்படுத்துகிறார் என்று தான் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் தமிழ்நாட்டின் அந்த அரசியல் எடுபடாது. தமிழ்நாட்டில் கால் நூற்றாண்டுகளாக அவர்கள் இந்த பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள் ஆனால் அது எதுவும் போனியாகாது.
2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்த அளவில் இரண்டு கருத்தியல் பிரிதிக்கான போர் என்று முதல்வரும் உறுதி பட அறிவித்திருக்கிறார். மதசார்பின்மைக்கு ஆதரவான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும், மதவாத அரசியலை உயர்த்தி பிடிக்கும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையிலான நாம் சந்திக்கவிருக்கிற தேர்தல். எனவே தமிழக மக்கள் மத நம்பிக்கை உள்ளவர்களாக, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் மதவெறி அரசியலுக்கு அவர்கள் ஒருபோதும் இடம் தர மாட்டார்கள் மதசார்பின்மை என்கிற அரசியல் அமைப்பு சட்டத்தில் விழுமியத்திற்கு பெரும் துணை இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம் குறித்த கேள்விக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவருடன் இருந்தவர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது இதன் மூலம் ஒரு பேர் உன்னை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அமலாக்கத்ரையும், சிபிஐயும் டெல்லியில் பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பாஜகவின் அரசியல் பகைகளை வேட்டையாடக் கூடிய அமைப்புகள் தொலைந்து அவர்களுக்கு நெருக்கடி தருகின்ற அமைப்புகள் என்கின்ற விமர்சனம் உண்மையாகி இருக்கிறது. அந்த அமைப்புகள் சுதந்திரமாக இயங்கவில்லை என்பது இதிலிருந்து வெளிச்சம் ஆகிறது. நான் சொல்ற பாதுஷா போக்குகளை ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்த அடையாளப்படுத்த வேண்டும், அம்பலப்படுத்த வேண்டும். அவர்களின் சதி முயற்சிகளை முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து.
சசிகலா புதிய கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு, கட்சியின் பெயரையே சசிகலா அறிவிக்கவில்லை, கொடியை மட்டும் தான் அறிமுகப்படுத்தி இருக்கிறார். கட்சி முறைப்படி அறிவிப்பு செய்த பிறகு தான் அவருக்கான ஆதரவு நிலை என்ன என்பதை நாம் அறிய முடியும் எப்படி இருந்தாலும், அந்தக் கட்சி திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தாது என்று நான் நம்புகிறேன் என கூறினார்.
இதையும் படிங்க: திமுகவில் ஐக்கியமாகும் ஓபிஎஸ் - உஷாரா இல்லைன்னா எல்லாம் போய்டும்... அதிமுக தலைவர்களை எச்சரித்த திருமா... !!