தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே கட்சியின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் கட்சியில் இருந்து கொண்டே ஆதிமுக கூட்டணிக்கு எதிராகவும் தற்போதைய மாநில தலைமைக்கு எதிராகவும் சிலர் செயல்படுவதாக மேலிடத்திற்கு ஆதாரங்களுடன் புகார்கள் பறந்தன. தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக பாஜகவில் உள்ளடி வேலைகள் தொடருமேயானால் அது தேர்தல் வெற்றியை பாதிக்கும் என உணர்ந்த கட்சி மேலிடம் நிர்வாகிகளுக்கிடையே நிலவி வரும் முட்டல் மோதல்களுக்கு முற்றுப்புள்ளை வைக்கும் விதமாகவே மதுரை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கே நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை வரவழைத்த அமித் ஷா பாஜக தலைமைக்கு எதிராகவோ யாரேனும் செயல்பட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் அமித்ஷா கடுமையாக எச்சரித்ததாக கூறப்பட்டது. குறிப்பாக நயினார் நாகேந்திரன் பதவி ஏற்றதில் இருந்தே அண்ணாமலையின் செயல்பாடுகளில் பாஜக தலைமை கடும் அப்செட்டில் உள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. அண்ணாமலைக்கு அமித்ஷா ஸ்ட்ரிக்ட் வார்னிங்..!

அவர் தான் சமீப அதிமுக கூட்டணியை விமர்சிப்பது, தனியாக பிரஸ் மீட் நடத்துவது, வார்ரூம் போட்டு பாஜக முக்கிய நிர்வாகிகளை சோசியல் மீடியாக்களில் விமர்சிப்பது, பாஜக போராட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பது என அண்ணாமலை தான் வேலைக்காட்டி வருகிறார். எனவே அமித் ஷா அண்ணாமலைக்குத் தான் வார்னிங் கொடுத்தார் எனக்கூறப்பட்டது.

இந்நிலையில், பாஜக 11 ஆண்டு மத்திய ஆட்சி காலத்தில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து கோவையில், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். இந்த நிலையில், சாதனை விளக்க பதாகையில் பிரதமர் நரேந்திர மோடி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, எல்.முருகன், ஜெ.பி.நட்டா, உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளீர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா புகைப்படங்கள் சாதனை விளக்க பதாகையில் அச்சிடப்படவில்லை. கோவையில் கெத்து காட்டுவது யார் என்பதில் வானதி சீனிவாசனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏற்கனவே முட்டல் மோதல் இருந்து வருவது பாஜகவினருக்கு தெரியும். ஆனால் அமித் ஷாவின் போட்டோ மிஸ் ஆனதை எண்ணித் தான் செம்ம ஷாக்கில் இருக்கிறார்கள். இது தெரியாமல் நடந்த தவறா? அல்லது வேண்டுமென்றே புறக்கணிப்பா?! என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!