தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. இதில் புதிதாக உருவான தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தலைமையில் போட்டியிட்டு, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இது திராவிடக் கட்சிகளான திமுக (சுமார் 59 இடங்கள்) மற்றும் அதிமுக (சுமார் 47 இடங்கள்) ஆகியவற்றின் நீண்டகால ஆதிக்கத்தை உடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்பட்டது. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. தவெக 108 இடங்களுடன் 10 இடங்கள் குறைவாக இருந்த நிலையில், ஆட்சி அமைக்க கூட்டணி ஆதரவு தேவைப்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தவெக தலைவர் விஜய் ஆளுநருக்கு கடிதம் அனுப்பி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரினார். அவர் தனது கட்சி தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் தெரிவித்தார். நேற்று விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து உரிமை கோரினார்.

ஆனால், ஆளுநர் அலுவலகம் உடனடியாக அழைப்பு விடுக்கவில்லை. விஜய்யிடம் 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதங்களை சமர்ப்பிக்குமாறு கோரியது. முன்பு தொலைபேசி உரையாடலிலும் இதை ஆளுநர் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது சட்ட ஆலோசனை பெறப்படுவதாகவும், பெரும்பான்மை உறுதிப்படுத்தப்படும் வரை முடிவு எடுக்கப்படாது என்றும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: உச்சக்கட்ட பதற்றம்...!! - விஜய்க்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் தீயாய் பரவிய செய்தி... மெரினாவில் போலீஸ் குவிப்பு...!
தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்திப்பதற்காக விஜய் புறப்பட்டுள்ளார். நேற்று ஏற்கனவே ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார். ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய் இடம் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கேட்டிருந்தார் ஆளுநர். மேலும் ஆட்சி அமைப்பதற்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆளுநர் இதுவரை விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத நிலையில் மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் புறப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு விஜய் புறப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் குறுக்கே நிற்பது சரியல்ல..! விஜய் பதவியேற்பு விஷயத்தில் தலையிட்ட ஜோதிமணி..!