புதிய கட்சியை ஆரம்பித்த வி.கே.சசிகலா கமுதியில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது: நான் அரசியல்வாதியிடம் பழகுவதுபோல் அம்மாவிடம் பழகவில்லை. என்னோட சொந்த உடன்பிறந்த அக்காவாக நினைத்து பழகினேன். அம்மாவுடன் கூட இருந்து நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்த ஆள் நான். 72 நாள் மருத்துவமனையில் இருந்தோம். நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு அழைத்து வர தயாராக இருந்தோம். யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென அட்டாக் வந்துவிட்டது .
ஆனால் வெளியில் உள்ளவர்கள் என்னென்ன கதை எல்லாம் கட்டினார்கள். நான்தான் கொன்று விட்டதாக பேசினார்கள். நான்கு ஆண்டு காலம் தண்டனை என தீர்ப்பு வந்தது. மறுநாள் மாலையே பெங்களூர் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். ஆகையால் அவசரமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் வரை சொல்லி இப்போது இருக்கிறார் அல்லவா அவரை முதலமைச்சராக ஆக்குவது என முடிவெடுத்தேன்.
அவர் பெயரைக் கூட இப்போது சொல்ல விரும்பவில்லை. பெயர் சொல்லும் அளவுக்கு கூட அவர் நல்லவர் இல்லை. எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என பரோல் கேட்டோம். பெங்களூர் சிறைச்சாலை உடனடியாக 15 நாட்கள் அனுமதி அளித்தது. ஆனால் சென்னை கமிஷனரிடமிருந்து அனுமதி வர வேண்டுமென பெங்களூர் சிறைச்சாலையில் கூறினார்கள். ஆனால் இங்கே நான் உட்கார வைத்து விட்டுப் போனவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என சென்னையில் இருந்து பதில் வந்தது.
இதையும் படிங்க: மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!
பெங்களூரூ சிறையில் இருந்த போது சென்னை சிறைக்கு மாற்ற அதிமுக அமைச்சர்கள் சிலர் வற்புறுத்தினர். நான் மறுத்து வரவில்லை; வந்திருந்தால் இன்று நான் இருந்திருப்பேனா? என்பது சந்தேகம். ஓபிஎஸ்-க்கு என்ன ஆச்சோ தெரியலை, தர்ம யுத்தம் என `அம்மா' நினைவிடத்தில் உட்கார்ந்து விட்டார். யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் அப்படி செய்துவிட்டார். அந்த தர்ம யுத்தம் தான், இப்போது வரை ஓபிஎஸ்க்கு பிரச்சினையாக உள்ளது.
ஜெயலலிதா மறைந்த அன்றைய இரவே என்னை முதல்வராக பொறுப்பேற்கச் சொல்லி சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கோரிக்கை வைத்தார்கள். ஜெயலலிதா இறந்த துக்கத்தில் இருந்த நான் பன்னீர்செல்வத்தை அழைத்து பொறுப்பேற்கச் சொன்னேன். அவர் முதல்வராக பொறுப்பேற்ற ஒருவாரத்தில் புகார்களை அடுக்கிய கும்பல் அடுத்ததாக பொதுக்குழுவை கூட்டி என்னை பொதுச்செயலாளராக நியமித்தார்கள்.. இதுதான் நடந்தது எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய நயினார்..!!