தமிழ்நாட்டில் உள்ள ஆறு எம்பிகளின் பதவி காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த சூழலில் மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணயம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜூன் 9ஆம் தேதியே மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் ஷல்மா மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஆகியோரை அறிவித்தது.

அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செய்யூர் தனபால் என முன்னாள் எம்எல்ஏ இரண்டு பேரும், அதிமுக உடைய இரண்டு ராஜ்யசபா சீட்டுகளுக்கு வேட்பாளர்களாக அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வழக்கறிஞர் இன்பதுரையை எடப்பாடி பழனிசாமி டிக் அடிக்க காரணமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். ஆமாங்க, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞரான வில்சனை களமிறங்கியுள்ளதால் அவருக்கு போட்டியாக இன்பதுரையை எடப்பாடி பழனிசாமி களமிறக்கியிருக்காராம்.
இதையும் படிங்க: மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!

வில்சன் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர்.வில்சனைப் போலவே இன்பதுரையும் அதிமுகவுக்கு இரட்டை இலை தொடர்பான வழக்கு முதற்கொண்டு பல வழக்குகளை ஜெயிச்சி கொடுத்திருக்காரு. அவரும் கிறிஸ்துவ சமூகத்தைச் சார்ந்தவர் தான். தென்மாவட்டங்களில் கிறிஸ்துவர்கள் மற்றும் நாடார் சமூக வாக்குகளை குறிவைத்து இந்த மூவ்வை அதிமுக எடுத்திருப்பதாக கூறப்படுது. அதேபோல அதிதிராவிட மக்களோட வாக்குகளை குறி வச்சி தான் தனபால் பெயரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டிக் அடிச்சதாவும் அந்த கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: விஜய், உதயநிதியால் வந்த சிக்கல்.. அதிமுக சீனியர்களை பகிரங்கமாக எச்சரித்த பொன்னையன்..!