நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், சுற்றுச் சூழல் பாசறை மாநில செயலாளர் முகமது அலி ஜின்னா, ஐ.டி. விங் மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர். இதனையடுத்து இவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், தன்னை தலைவனாக ஏற்று வந்த தன் கட்சி தம்பி தங்கைகளையே பிசிறு என்பார், மசுறு என்பார் வேசி மகனென்பார். இருந்தால் இரு போனால் போ என்பார் தன்னை நாடி வந்தவர்களை பாதுகாப்பதை தவிர்த்து வேலியே பயிரை மேய்வது போல செயலாற்றுவார் என சீமான் குறித்து பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ஒரு அரசியல் கட்சியின் நோக்கம் என்பது வெற்றியாகத்தான் இருக்கமுடியமே தவிர மாறாக பயிற்சி என்று சொல்லி கட்சியை பணையம் வைக்கிறார். தேசிய அளவில் எந்த கட்சியினரும் இல்லாத அளவிற்கு சரமாறியக, தன்தோன்றியாக 12000 மாநில நிர்வாகிகள் நியமித்து தொண்டர்களே இல்லாத மாநில நிர்வாகிகள் கொண்ட கட்சியாக மாற்றியுள்ளார். தலைவர் பிரபாகரன் தத்துவத்தை ஏற்பதாக கூறுவார் அவரின் நம்பிக்கைக்குரிய தளபதி பொட்டம்மானை என் கட்டைவிரல் மயிரென்பார்.
தலைமைக்கும் தொண்டர்களுக்கும் தொடர்பு இல்லாத இயக்கமாக நாம் தமிழர் தள்ளாடுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் எதிரி என்பர்.மற்ற மந்திரிகளை மாமன் மச்சான் என்பார். ஆடு பகை குட்டி உறவு. எனத்தொடரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரின் தொடர் அவலம்.தேர்தலுக்கு தேர்தல் நான் வளர்கிறேனே மம்மி என்று காம்பிளான் விளம்பரம் போல, ஆபரேசன் சக்சஸ், பேசண்ட் டெத் என்பது போல வாக்கு சதவீதம் உயர்வு, டெப்பாசிட் அவுட் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING சீமானுக்கு “குட்பை” - நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு விலகல்...!
கடந்த 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நோட்டாவிற்கு கூட தமிழகத்தில் ஐந்து லட்சம் வாக்குகள் (2.1சதவீதம்) வாங்கியது. நோட்டாவிற்கு யார் பிச்சாரம் செய்தார்கள்?யார் வாக்கு கேட்டார்கள்? நாம் தமிழர் கட்சியின் வாக்கென்பது திமுக-அதிமுக -பாஜக-காங்கிரஸ் சின் வெறுப்பு வாக்குகள் தானே ஒழிய, நாம் தமிழரின் ஆதரவு வாக்குகள் இல்லையென்பதை நாம் தமிழர் தலைமை உணரவேண்டும். உணராமல் போனது அவரின் அறியாமை. அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். எண்ணற்ற தன்னல கருதா தம்பிகளின் உழைப்பை மதித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை இனியாவது திருந்த வேண்டும் என்று விரும்புகிறோம் எனக்கூறினார்.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வில் குளறுபடி.. இதுதான் தமிழுக்கு கொடுக்குற முக்கியத்துவமா? சீமான் காட்டம்..!