• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்!

    பீகார் மாநிலத் தேர்தலில் மக்களை ஏய்த்து வாக்குகளை வாங்குவதற்காகத்தான் ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Wed, 30 Apr 2025 22:00:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vck president Thirumavalavan says what is politics behind the announced of caste based census

    பீகார் மாநிலத் தேர்தலில் மக்களை ஏய்த்து வாக்குகளை வாங்குவதற்காகத்தான் ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தியாவில் அடுத்து மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தப்படும் என இந்திய ஒன்றிய அரசு அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்! இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். ‘அடுத்து மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு’ என்றுதான் கூறியிருக்கிறார்கள். ஆனால், எப்போது அந்தக் கணக்கெடுப்பு நடக்கும் என அறிவிக்கப்படவில்லை. அடுத்த சென்சஸ் கணக்கெடுப்பு என்றால் அது 2031 க்குப் பிறகுதான். அப்போது பாஜக ஆட்சியில் இருக்கப் போவதில்லை. எனவே, இந்த அறிவிப்பு அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்பட்டதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

    Bihar election

    ஒன்றிய பாஜக அரசும் சங் பரிவார் அமைப்புகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதை எதிர்த்துவந்தன. அதைத் தவிர்ப்பதற்காகவே 2011-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை இதுவரை மேற்கொள்ளாமல்  ஏமாற்றி வந்த பாஜக அரசு இப்போது திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதற்குக் காரணம் என்ன என நாம் சிந்திக்க வேண்டும். இன்னும் சில மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலின் மையப் பிரச்சனையாக சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மாறியிருக்கிறது. ராகுல் காந்தி சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதைத்தான் தனது பரப்புரையில் முன்னிறுத்தி வருகிறார்.  அதை சமாளிப்பதற்காகவே ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறது.

    Bihar election

    சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2036 இல் நடைமுறைக்கு வரப்போகிற மகளிர்  இட ஒதுக்கீடு சட்டத்தை எப்படி 2024 பொதுத் தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக 2023 இல் நிறைவேற்றியதோ, அதேபோலத்தான் 2031க்குப் பிறகு நடக்கப்போகும் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பாஜக அரசு அறிவிப்புச் செய்துள்ளது. சமூக நீதியில் உண்மையிலேயே ஒன்றிய பாஜக அரசுக்கு அக்கறையிருந்தால் உடனடியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியைத் துவக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இதையும் படிங்க: மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தட்டும்.. தமிழக அரசு ஒரு சர்வே எடுக்கணும்.. ராமதாஸ் புது டிமாண்ட்!

    Bihar election

    அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் - 246, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது. அது ஒன்றிய அதிகாரப் பட்டியலில் 69-ஆகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது தெரிந்திருந்தும் பாஜகவைக் காப்பாற்றுவதற்காகத் தமிழ்நாட்டில் சில கட்சிகள் திமுக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பைச் செய்யவேண்டும் எனக் கூப்பாடு போட்டு வந்தன. அந்தக் கட்சிகள் இப்போதும் மாநில அரசுதான் இந்தக் கணக்கெடுப்பைச் செய்யவேண்டும் எனச் சொல்வார்களா? சென்சஸ் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கச் சொல்லி ஒன்றிய அரசை வலியுறுத்துவார்களா?

    Bihar election

    பீகார் மாநிலத் தேர்தலில் மக்களை ஏய்த்து வாக்குகளை வாங்குவதற்காகத்தான் ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என்றாலும் சாதிவாரிக் கணக்கெடுப்பும் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதும் சமூகநீதிக் கொள்கைக்கு வெற்றி! சனாதனவாதிகளின் திட்டத்துக்குப் பின்னடைவு! எனவே, இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். இதனை நடைமுறைப்படுத்திட சமூகநீதி கட்சிகள்-இயக்கங்கள் யாவும் ஒருங்கிணைந்து ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கெடு முடிந்தும் செல்லாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை.. அதிரடி முடிவுக்கு தயாராகும் அரசு?

    மேலும் படிங்க
    ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு...கட்சி பூசல் குறித்து ஆலோசனை?

    ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு...கட்சி பூசல் குறித்து ஆலோசனை?

    தமிழ்நாடு
    நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்..  வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!

    நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்.. வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!

    இந்தியா
    ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!

    ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!

    தமிழ்நாடு
    ரஷ்யாவின் நோக்கமே இதுதான்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு..!

    ரஷ்யாவின் நோக்கமே இதுதான்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு..!

    உலகம்
    நயினார் VS அண்ணாமலை.. தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? குழம்பும் தொண்டர்கள்..!

    நயினார் VS அண்ணாமலை.. தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? குழம்பும் தொண்டர்கள்..!

    தமிழ்நாடு
    அதிபர் வேட்பாளரை துளைத்த துப்பாக்கி குண்டு.. கொலம்பியாவை அதிர வைத்த சம்பவம்..!

    அதிபர் வேட்பாளரை துளைத்த துப்பாக்கி குண்டு.. கொலம்பியாவை அதிர வைத்த சம்பவம்..!

    உலகம்

    செய்திகள்

    ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு...கட்சி பூசல் குறித்து ஆலோசனை?

    ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு...கட்சி பூசல் குறித்து ஆலோசனை?

    தமிழ்நாடு
    நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்..  வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!

    நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்.. வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!

    இந்தியா
    ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!

    ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!

    தமிழ்நாடு
    ரஷ்யாவின் நோக்கமே இதுதான்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு..!

    ரஷ்யாவின் நோக்கமே இதுதான்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு..!

    உலகம்
    நயினார் VS அண்ணாமலை.. தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? குழம்பும் தொண்டர்கள்..!

    நயினார் VS அண்ணாமலை.. தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? குழம்பும் தொண்டர்கள்..!

    தமிழ்நாடு
    அதிபர் வேட்பாளரை துளைத்த துப்பாக்கி குண்டு.. கொலம்பியாவை அதிர வைத்த சம்பவம்..!

    அதிபர் வேட்பாளரை துளைத்த துப்பாக்கி குண்டு.. கொலம்பியாவை அதிர வைத்த சம்பவம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share