நாமக்கல், தமிழ்நாட்டின் “முட்டைத் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் முட்டை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன, தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம், கேரளா, மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினசரி சுமார் 60 லட்சம் முட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு தினசரி சுமார் 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பண்ணை கொள்முதல் முட்டை விலையை தினசரி தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. முக்கிய திருவிழா காலங்களில் முட்டை நுகர்வு குறைவதால், விற்பனை குறைந்து முட்டை விலை சரிவடைகிறது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுதிமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹலோ புதின்.. இத கவனிச்சீங்களா? இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து போனில் பற்றவைத்த ட்ரம்ப்..!

இந்த நிலையில், முதல்முறையாக நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தலா 4.75 லட்சம் வீதம் 20 குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்னர்களில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முட்டைகள் அமெரிக்கா சென்றடையும் என்றும் அதன் பின்னர் தொடர்ந்து முட்டை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதி அளித்த நிலையில் முதற்கட்டமாக 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கோழிப்பண்ணையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி தொடங்கி உள்ளதால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனை மேம்படும் என்றும் விலை வீழ்ச்சியடைவது தடுக்கப்படும் என்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எங்ககிட்ட மோதாதீங்க! எதிர்பார்க்காத அளவுக்கு பதிலடி இருக்கும்! ஈரானை கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்..!