பண்டிகை காலம், நீண்ட நாள் விடுமுறை என்றாலே சென்னையில் வசிக்கும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். அந்த நேரத்தில் சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதே சமயம் சென்னைக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும். பேருந்துகளில் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இருந்தாலும் இவ்வளவு சிரமத்தையும் மீறி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். காரணம் தங்களது விடுமுறை நாட்களை சொந்த ஊர்களில் சொந்தபந்தங்களுடன் நேரத்தை செலவிடவேண்டும் என்பதற்காக தான்.

அந்த வகையில் சுபமுகூர்த்த தினம், பக்ரீத் பண்டிகை, வார விடுமுறை ஆகிய காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
இதையும் படிங்க: கொஞ்சம் விட்ருந்தா மொத்தமும் போயிருக்கும்.. வானில் ஊசலாடிய 326 பேரின் உயிர்.. சாதுர்யமாக செயல்பட்ட பைலட்..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஜூன் 4ம் தேதி முதல் இன்று அதிகாலை வரை 11 ஆயிரம் பேருந்துகளில் சுமார் 6.6 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள், சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்கள் என்பதால் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தொடர் விடுமுறை என்பதால், வியாழக்கிழமை இரவு முதலே ஏராளமானோர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல தொடங்கியிருந்தனர். அந்த வகையில் ஜூன் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி அதிகாலை வரை சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பேர் பயணம் செய்துள்ளனர்

இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பேருந்துகளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணித்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து 3 ஆயிரத்து 28 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அத்துமீறும் போலீசார்! சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு! முதல்வரை வெளுத்து வாங்கும் நயினார் நாகேந்திரன்..!