சென்னையில் வைர வியாபாரியை கட்டி போட்டு சுமார் 32 கோடி நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சென்னையைச் சேர்ந்த ஜான் லாயட், விஜய், ரத்தீஷ் குமார், அருண் பாண்டியராஜ் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் வந்த தார் காரை ஆகியவற்றை சென்னை துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல்துறையை சேர்ந்த இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களிடம் ஒப்படைக்க பட்டதை தொடர்ந்து சென்னைக்கு விசாரணைக்காக கொண்டு சென்றனர்

சென்னையில் நேற்று வைர வியாபாரி சந்திரசேகரை தனியார் ஹோட்டலில் இருந்தபோது நகை வாங்குவது போன்று நான்கு பேர் கொண்ட கும்பல் அவரது அறைக்கு சென்று கட்டிப்போட்டு அந்த கும்பல் அவரிடம் இருந்து 32 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியது இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய கும்பலை தீவிர சோதனையில் ஈடுபட்டு கைது செய்ய தமிழக முழுவதும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
இந்நிலையில் இந்த கும்பல் தூத்துக்குடிக்கு செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டனர் இந்நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சென்னையில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சென்னையைச் சேர்ந்த ஜான் லாயட் ,விஜய், ரத்தீஷ், அருண் பாண்டியராஜ் ஆகியோர் இருப்பது தெரியவந்தது

இதையும் படிங்க: மெகுல் சோக்ஸிக்கு விழுப்புரத்தில் சொத்து..! பெல்ஜியம் அரசிடம் இந்தியா அக்டோபரிலேயே கோரிக்கை..!
இதைத் தொடர்ந்து கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த சென்னை துணை ஆணையர் தலைமையின் கீழ் செயல்படும் தனிப்படையைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சிப்காட் காவல் நிலையம் வந்து அங்கிருந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வைரம் மற்றும் கொள்ளையடித்து விட்டு தப்பி வந்த தார் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: 2025ம் ஆண்டில் மொத்தம் 7,698 புகார்கள்: அதில் இந்த 2 தான் அதிகம்..! தேசிய மகளிர் ஆணையம் ஷாக் தகவல்..!