அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார். பிரசாத் கொடுத்த தகவலின் பேரில், நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதுடன், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பரபரக்கும் போதைப் பொருள் வழக்கு! நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் விசாரணை..!

இவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவிடம் போதைப்பொருள் தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்தனர். தலைமறைவாகி இருந்த நடிகர் கிருஷ்ணாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் பல்வேறு விவகாரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்போது, கொக்கைன் சப்ளையர் பிரதீப் குமாருக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறியதாக தெரிகிறது.

மருத்துவ பரிசோதனை முடிவில் போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபணமாகும் பட்சத்தில் கிருஷ்ணாவிற்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரபரக்கும் போதைப் பொருள் வழக்கு! நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் விசாரணை..!