போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகி உள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியது உறுதி செய்யப்பட்ட நிலையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பிரசாத்திடமிருந்து ஐந்து ஆண்டுகளாக ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியது செல்போன் மூலம் அம்பலமானது. நடிகர் ஸ்ரீகாந்தியின் செல்போனை தனிப்படை போலீசார் ஆய்வு செய்ததில் பிரசாத்திடம் பேசியது பணம் அனுப்பியது உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க: எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு 'spy' வேலை.. பஞ்சாபில் மேலும் ஒரு யூடியூபர் கைது..!