அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு திமுக உரிமை கொண்டாடுவதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் திமுக எம்.பி. கனிமொழியின் கருத்தை அதிமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பான அதிமுக பதிவில், அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது என்பது திமுக குடும்பத்தின் DNA-வில் கலந்தது. அதற்கு ஸ்டாலினின் தங்கையான கனிமொழி எப்படி விதிவிலக்காவார் என கூறியுள்ளது.

தன் பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த திமுக இளைஞர்கள் குறித்தோ, திமுக அனுதாபி ஞானசேகரனின் தொடர்புகள் குறித்தோ, SIR குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசாமல் மிதவாதியாக இருந்த கனிமொழி, அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கின் தீர்ப்பை, தங்களுக்கு கிடைத்த வெற்றி போல சித்தரித்து அறிக்கை உருட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார் என கூறியுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கும் உங்கள் அண்ணன் அரசுக்கும் என்ன சம்மந்தம் எனவும் நீங்கள் இந்த வழக்கில் தலையிடவே கூடாது எனத் தானே நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது., அதனை நீங்கள் அமைத்து விசாரித்தது போல் அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: எங்கள அசைக்க முடியாது... நாங்க எல்லாரும் ஒன்னுதான்! மத்திய அரசுடன் கைகோர்த்த கனிமொழி!

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வர 6 ஆண்டுகள் ஆகிவிட்டது என Timeline போடும் கனிமொழி, அதில் 4 1/2 ஆண்டுகள் அவர் அண்ணன் ஆட்சி என்று மறந்துவிட்டாரா? அல்லது, தெரிந்தே, உட்கட்சி பூசலில் Same Side Goal அடித்துவிட்டாரா என கிண்டலடித்து உள்ளது. தங்கள் பாதுகாப்பை இழந்து நிற்கும் தமிழக மக்கள், ஜனநாயகப் பூர்வமாக 2026-ல் கொடுக்கப் போகும் தர்ம அடி காத்திருப்பதாக தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பரப்புரை.. ரஷ்யா குழுவுக்கு கனிமொழி தலைமை..!