மட்கிப் போன காங்கிரஸ் கட்சி வெட்கித் தலை குனிய வேண்டும் என அதிமுக விமர்சனத்தை முன்வைத்துள்ளது. கொள்கைக் கூட்டணி என்றால் என்ன தெரியுமா என்றும் கேள்வி எழுப்பியது. காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஆனபோது, கமுக்கமாக இருந்து சொந்த சீட்டைக் காப்பற்றிக் கொள்வது, இந்திரா காந்தி பெயரை நீக்கிவிட்டு கருணாநிதி பெயர் வைத்தால் கூட, வெட்கமே இல்லாமல் அமைதியாக இருப்பது இதைதானா என்று கேள்வி எழுப்பி உள்ளது.
வரலாற்றைத் திருப்பி பார்த்தால், இந்திரா காந்தியை திமுக-வினர் தாக்கி, அவர் தலையில் இருந்து வடிந்த ரத்தத்தை கருணாநிதி என்னவென்று சொன்னார் என காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக கடுமையான கேள்விகளை முன் வைத்துள்ளது. கருணாநிதியின் விஞ்ஞான ஊழல்களை உலகிற்கே எடுத்து சொன்ன சர்காரியா கமிஷனை அமைத்தது யார் என்றும் கேட்டுள்ளது.

நடிகர் கட்சியை "கை" காட்டி பேரம் பேசுவது தான் உங்கள் கூட்டணியின் கொள்கை என்பது மக்களுக்கு இப்போது தான் புரிந்தது என்றும் தெரிவித்தது. கடந்த மூன்று மாதங்களாக, அறிவாலயத்தைப் பார்த்து சத்தியமூர்த்தி பவனும், சத்தியமூர்த்தி பவனைப் பார்த்து அறிவாலயமும் மாறி மாறி., காரித் துப்பிக் கொண்டதை எல்லாம் ஒரே இரவில் துடைச்சாச்சா என்று கடுமையான கேள்விகளை முன்வைத்தது. நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் போற்றும் பெருந்தலைவரான காமராஜரை அவர் வாழும் வரையிலும் கேவலமாக சித்தரித்து இழிவுபடுத்திய கருணாநிதி, அவர் மறைந்த பிறகும் மெரினாவில் இடம்தர மறுத்து அசிங்கப் படுத்திய வரலாறு எல்லாம் மறந்துவிட்டதா என்ன என்று கேட்டுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!
திமுக-உடன் சேர்ந்து செய்த ஈழப் படுகொலை உள்ளிட்ட அத்தனைப் பாவங்களுக்குமான சம்பளமாக 2014-ல் இருந்து அதள பாதளத்தை நோக்கி, "100 தோல்வி காங்கிரஸ்" என்று நாடே கைகொட்டி சிரிக்கும் அவல நிலையில், கேவலம் ஸ்டாலினிடம் மூன்று இடத்திற்கு கெஞ்ச வேண்டிய இடத்திற்கு போன பிறகும், இந்த பண்ணையார்களுக்கு திமிர் அடங்கிய பாடில்லை என்றும் “பப்பு"வை நம்புங்கள்., பாதச் சுவடு தெரியாமல் காங்கிரஸ் நாட்டை விட்டு அழித்தொழியப் போவது உறுதி என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: OVER... OVER..! உங்க ஆட்சியின் ஆயுசு ஓவர்தான் ஸ்டாலின் சார்..!! சாடிய அதிமுக..!!