தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் நடந்த விவாத மேடையில் திமுக நிர்வாகி ஒருவர் ஆபாசமாக பேசி இருப்பதாக அதிமுக சார்பில் காணொளி ஒன்று பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக, கயவனின் கடைசி ஆயுதம் ஆபாசம். ஆனால், திமுக காரனின் முதல் ஆயுதமே அது தான் எனக்கூறி உள்ளது.

அதிமுக செய்தித் தொடர்பாளர் சசிரேகாவை திமுக செய்தி தொடர்பாளர் விக்கி பேசிய அருவருக்கத்தக்க பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் ஞானசேகரன் தொடங்கி தெய்வச்செயல் வரை தங்கள் கட்சியின் லட்சணம் ஊரெல்லாம் நாறிக் கொண்டிருக்க, திமுகவின் கொத்தடிமைகள் இன்னும் பெண்களை நடத்தும் விதம் இது தான் என்றும் சாடி உள்ளது. பெண்கள் யாரும் பாலியல் குற்றங்களைப் பற்றி பேசக் கூடாது. விமர்சிக்கக் கூடாது., மீறி விமர்சித்தால் ஆபாசக் கணைகளை வீசுவோம்" என்பதே திமுகவின் DNA என்றும் அதற்கு உதாரணம் அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு. "வழக்கு கொடுக்காதே, Medical Test எடுக்காதே" என மாணவியிடம் சொல்லியது முதல், FIR லீக் வரை சகல சித்துவேலைகளையும் செய்தது திமுக என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை பிரதிபலித்த எம். பி.க்கள் குழு! கனிமொழிக்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு!

அதே போல் அண்ணா நகர் பாலியல் வழக்கில், 10 வயது சிறுமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட CBI விசாரணையை எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரை சென்று வாதிட்டது திமுக அரசு என்றும் இப்படிப்பட்ட இவர்கள் தான் அண்ணா பல்கலை. வழக்கில் தீர்ப்பு வாங்கி தந்தார்கள் என்று சொன்னதை மக்கள் யாருமே நம்பவில்லை எனவும் ஞானசேகரன் இழைத்த குற்றத்திற்கு இணையான பெரும் குற்றம் தான் இந்த விக்கியின் பேச்சு என்றும் கூறியுள்ளது. திமுக உண்மையிலே பெண்களுக்கான கட்சி என்றால், ஸ்டாலின் இந்த ஆபாச பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்ன சொல்லி அழைப்பது எங்கள் திராவிடத் தீயே! கலைஞருக்கு கனிமொழி புகழாரம்!!