பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீதான நிலைப்பாடு என்ன என்பதை உலக நாடுகளுக்கு வெளி காட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டது.

பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்தது. பாஜக உறுப்பினர்கள் மட்டுமல்லாது எதிர்க்கட்சி எம்.பி. களையும் சேர்த்து இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. கனிமொழி, சசிதரூர், சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏழு பேர் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கேள்விக்குறியானது உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம்.. டிடிவி தினகரன் கடும் தாக்கு..!

இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா, கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்து கூறியது. பயணத்தை முடித்துக்கொண்டு கனிமொழி தலைமையிலான குழு இந்தியா திரும்பி உள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய கனிமொழி எம். பி.க்கு சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அறிவுச் சூரியனின் பிறந்தநாள்..! கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!