தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளது. மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் ஆகியோர், தங்களது வேட்பு மனுக்களை, இன்று நண்பகல் 12.45 மணிக்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் தாக்கல் செய்கின்றனர்.
இதையும் படிங்க: எடப்பாடி தலையில் இறங்கியது இடி... அதிமுக முக்கிய நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு...!

இதே போல், திமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கமல்ஹாசனும் தங்களது வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #mutemode மாடல் அரசு... தீக்குளித்த விவசாயியை காப்பாற்ற இபிஎஸ் வலியுறுத்தல்..!