நில பத்திர மோசடி விவகாரம் தொடர்பாக தான் அளித்த புகாருக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயி ஜெயராமன் என்பவர் தீக்குளித்தார். மனு கொடுக்க வந்த ஜெயராமன் எனும் விவசாயி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஸ்டாலின் ஆட்சியின் மீது மக்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி என்றும் கூறியுள்ளார்.

மக்களின் எந்த புகாருக்கும் அரசு செவி சாய்ப்பதில்லை., It's in complete #MuteMode! பச்சைத் துண்டுடுத்தும் விவசாயியை, தன் உயிரை விடத் துணிய வைத்த ஸ்டாலின் அரசு, தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது என்று சாடினார். மேலும், ராணிப்பேட்டையில் 80 வயது மூதாட்டியை 19 வயது இளைஞன் பாலியல் தொல்லை அளித்து கொலை செய்ததாகவும், 80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை என்ற கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு நிலையா? உடனே மாநில பாடத்திட்டத்தை மாற்றுங்கள்.. அன்புமணி வலியுறுத்தல்!

விவசாயி ஜெயராமன் உயிரைக் காக்க வேண்டும்.,அவருக்கு நிவாரணம் வழங்கி, அவரின் குறையைத் தீர்த்து வைக்க வேண்டும் எனவும், ராணிப்பேட்டை மூதாட்டியை பாலியல் தொல்லை அளித்து கொலை செய்த வழக்கில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவை பிரதிபலித்த எம். பி.க்கள் குழு! கனிமொழிக்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு!