தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் காலத்தில், ஓட்டுக்கு பரிசு பொருட்கள் அல்லது பணம் கொடுப்பது என்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான செயல் ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ள சட்டதிட்டங்கள் தெளிவாகத் தடை செய்கின்றன. வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பணம், பரிசு பொருட்கள், டோக்கன்கள், கூப்பன்கள் அல்லது வேறு எந்த வடிவிலான சலுகைகளையும் வழங்குவது தேர்தல் ஊழல் என்று கருதப்படுகிறது.
இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு வருடம் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படலாம். தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் செலவு கண்காணிப்பாளர்கள் இத்தகைய செயல்களைத் தடுக்க தீவிரமாகச் செயல்படுகின்றனர். வாக்காளர்களும் இத்தகைய சலுகைகளை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தப் பின்னணியில், கரூரில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு டோக்கன்களை மறைத்து வைத்ததாக எழுந்த புகார் ஒரு பரபரப்பான சம்பவமாக மாறியது. கரூரில் பரிசுத்தக்கங்களை அதிமுகவினர் மறைத்து வைத்ததாக எழுந்த புகாரை கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!
தனியார் கணினி மையம் ஒன்றில் அதிமுகவினர் பத்தாயிரம் ரூபாய் பரிசு கூப்பன்களை பதுங்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டை இழந்தது. இதனால் அந்த இடத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றும் அதிமுக மற்றும் திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: "உனக்கு அறிவில்லையா"..? தவெக ஆனந்த் திட்டினாரு..! அஜிதா ஆக்னல் கண்ணீர் மல்க பேட்டி..!