மதுரையில் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, போதைப்பொருள் இவ்வளவு சுதந்திரமாக கிடைக்க காரணமே திமுகவின் ஆட்சிதான் என்றும் திமுகவில் இருப்பவர்களை போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டினார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றம் சாட்டிய அவர் போதைப் பொருள் புழக்கத்தால் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைச் சம்பவங்கள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாக கூறினார்.

நடிகர்கள் மட்டும் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்று இல்லை மாணவர்கள் மத்தியிலும் அதிக அளவில் போதைப் பொருட்கள் குழப்பத்தில் இருப்பதாக குற்றம் சாட்டிய காயத்ரி ரகுராம், திமுகவில் இருந்து அதிமுகவிற்கு ஆட்களை அனுப்பி கெட்ட பெயர் வாங்க வைக்க வேண்டும் என்று செயல்படுவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் நிலையில் நடிகர்கள் பிரச்சினையை வைத்து திசை திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சர் மட்டும் தான் தன்னை ஒரு மாடல் என சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர அவர் தமிழகத்தை ஒரு மாடல் ஆக்கியதாக தெரியவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: லாக்அப் டெத்! ஜெய்பீம் பார்த்து REVIEW எழுதுன ஸ்டாலின் எங்க போனாரு.. கொந்தளித்த எடப்பாடி..!

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக நிறுத்தி உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் நடிகர்கள் மட்டுமல்லாத சாமானிய மக்களும் போதைப்பொருட்களை பயன்படுத்தும் நிலைக்கு தமிழ்நாடு வந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாட்டு மக்கள் அன்றாடம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை மையப்படுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் திமுக மக்கள் பிரச்சனைகளை பேசாமல் அதனை திசை திருப்பும் வேலைகளில் எல்லாம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதற்கு மிக முக்கிய காரணம் டாஸ்மாக் என்று தெரிவித்த காயத்ரி ரகுராம், மதுவிலக்கு அமல்படுத்த முடியாது மதுவிலக்காமல் படுத்தினால் கள்ளச்சாராய புழக்கம் அதிகரிக்கும்., ஆனால் மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வருவோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளராக V.S. பாபு நியமனம்