ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்த விமானி சுமீத் சபர்வால் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. அதில் மகனின் உடலைப் பார்த்து 90 வயது முதியவரான அவரது தந்தை கதறி அழுத காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது. விபத்துக்கு மூன்று நாட்கள் முன்புதான் உங்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. பேசாம நான் வேலையை விட்டுட்டு உங்களோடவே இருந்து உங்களை நல்லா கவனிச்சுக்கணும் போல இருக்குப்பா என தனது தந்தை புஷ்கராஜிடம் கேப்டன் பைலட் சுமீத் தெரிவித்துள்ளார். அந்திம காலத்தில் தந்தைக்கு மகனாக பணிவிடை ஆற்ற நினைத்திருந்தார்.

லண்டனுக்கு சென்றுவிட்டு அழைக்கிறேன்பா என இறுதியாக போனில் பேசியவர் கேப்டன் சுமித். அழைப்பில் வராமல் சடலமாய் வந்தது கண்டு வேதனையில் நொருங்கி போனார் அவரது தந்தை. பணியிலிருந்து ஓய்வெடுக்கும் முடிவை எடுக்கும் முன்பே பணியிலேயே அவர் உயிர் பிரிந்தது. தற்போது 90 வயதில் புத்திர சோகத்தை தாங்க முடியாமல் தவித்து நிற்கிறார் இந்த முதியவர்.
இதையும் படிங்க: இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

யார் இந்த சுமித் சபர்வால்?
கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் துணை விமானி கிளைவ் குந்தர் இவர்கள் இருவரும் தான் ஜூன் 12ம் தேதி மாலை 1.38 மணி அளவில் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தை ஓட்டியவர்கள். இருவரும் 230 பயணிகளையும் 10 பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு வழக்கம் போல் விமானத்தை இயக்கியுள்ளனர்.

இந்த விமானத்தை 8,200 மணிநேரம் விமானப் பயணத்தை மேற்கொண்ட கேப்டன் சபர்வால் இயக்கியுள்ளார். மும்பையின் போவாய் பகுதியில் வசித்து வந்த கேப்டன் சுமீத் சபர்வால் மிகவும் அமைதியானவர், சக ஊழியர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர் என பெயர் வாங்கியுள்ளார். இவருடைய அப்பா ஒரு முன்னாள் டிஜிசிஏ அதிகாரியாம், மேலும் சுமீத் சபர்வால் குடும்ப உறவினர்களில் ஏற்கனவே 2 விமானிகள் இருந்துள்ளனர். அவர்களைப் பார்த்தே சுமீத் விமான ஓட்டியாக மாறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே தனது 82 வயது தந்தையை பராமரிப்பதற்காக வேலையை விட்டு நிற்கும் முடிவை சுமீத் சபர்வால் எடுத்திருந்துள்ளார். ஆனால் மரணம் அதற்கு முன்னதாகவே அவரது உயிரை பறித்துக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஒரு பூவில் உள்ள இரு இதழ்கள்'.. வடகலை - தென்கலை விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் கருத்து..!