சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. ஈரான் மீது தொடர்ந்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலை நடத்திக் கொண்டு வந்திருக்கிறது. இந்த போரானது நான்காவது நாளாகவும் தொடர்ந்திருக்கிறது. அதற்கு பதிலடியாக ஈரான் தற்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தக்கூடிய காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சவுதி அரேபியா நாட்டை பொறுத்தவரை ஆரம்ப காலம் முதலே ஈரானுக்கு எதிரான நிலைபாட்டில் தான் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய ஒரு சில உள் முரண்பாடுகள் ஷன்சியா என்கின்ற அடிப்படையிலான முரண்கள் காலம் காலமாக நீடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆரம்ப காலம் முதலே சவுதிக்கும் அமெரிக்கா இடையே நல்ல நட்பு நீடித்து வருகிறது.
அந்த அடிப்படையில் தான் சவுதி, ஈரான் அந்த வளைகுடா பகுதியில் மிகப்பெரிய நாடாக மாறுவதை விரும்பாத ஒரு சூழல் இருந்து வருகிறது. சவுதி தன்னுடைய தலைமையில் தான் வளைகுடா நாடுகள் இருக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மறுபுறம் ஈரான் தன்னுடைய தலைமையின் கீழ் வளைகுடா நாடுகளை ஒரு குடையின் கீழ் திரட்டுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டது. இதனால் சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நட்புறவு காட்டிலும் அமெரிக்காவுடனான சவுதி நட்பு அதிகம் இருந்து வருகின்றது.
இதையும் படிங்க: "இனி விடமாட்டோம்... முடிஞ்சா மோதிப் பார்...” - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை...!
இந்த சூழ்நிலையில் தான் ஈரான் தன்னை சுற்றி இருக்கக்கூடிய அமெரிக்க நிலைகளை தாக்கியது. இப்பொழுது அதிலிருந்து கொஞ்சம் கூடுதலாக அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கக்கூடிய நாடுகளையும் ஈரான் குறிவைக்க தொடங்கி இருக்கின்றது என்பதுதான் இந்த மோதல் அடுத்த கட்டத்தை சென்றடைந்திருப்பதற்கான காரணமாக மாறியிருக்கின்றது. எங்களுடைய சட்டப்பூர்வமான இலக்குகளைதான் நாங்கள் புரிய வைக்கின்றோம் என்று ஈரானினுடைய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வமான இலக்குகள் என்று எதை சொல்லுகின்றார்கள் என்றால் அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாவிட்டால், அமெரிக்கா ஈரான் நாட்டை சுற்றி அமைத்திருக்கக்கூடிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை தான் கூறுகிறது. இப்பொழுது அந்த ராணுவ நிலைகளை அமைப்பதற்கு அனுமதி கொடுத்த நாடுகளையும் தாக்க தொடங்கி இருக்கின்றது.
ஈரானை சுற்றிலும் இருக்கக்கூடிய கத்தார், பக்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க நிலைகள் அமைந்திருக்கக்கூடிய அரபு நாடுகள் மீது சரமாரியான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது. கடந்த காலங்களில் ஈரான் வளைகுடா நாடுகளுக்குள் இருக்கக்கூடிய ஒரு சில நாடுகளை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டது. அதன் காரணமாகத்தான் அந்த நாடுகள் ஈரான் தங்களை கவர்ந்து விடுமோ, தங்களுடைய மொத்த வளங்களையும் ஈரான் சூரையாடி விடுமோ என்கின்ற அச்சத்தில் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தன. அமெரிக்காதங்களுடைய பகுதியில் ராணுவத்தளங்களை அமைக்க ஒப்புக்கொண்டன. அந்த அடிப்படையில் மத்திய தரைக்கடல் பகுதியைக் கண்காணிக்கக்கூடிய வகையில், அமெரிக்கா வளைகுடா நாடுகளில் பல்வேறு இடங்களிலும் போர் விமானங்கள், போர் கப்பல்களை நிறுத்துவதற்கான தளங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்துள்ளது.
வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தளங்களை அழித்து வரும் ஈரான், அதன் தொடர்ச்சியாக சவுதி அரேபியாவிலும் உள்ள பல்வேறு ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிகாலை ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் தாக்கியதால், சிறிய தீ விபத்து ஏற்பட்டு, கட்டிடத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெட்டா, ரியாத் மற்றும் தஹ்ரானில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகம் பாதுகாப்பான தங்குமிடத்தை பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிங்க: ஆபத்து..ஆபத்து...!! - உலகமே அஞ்சிய முடிவை எடுத்த ஈரான்... மூடப்பட்டது ஹார்மூஸ் நீரிணை...!