பரிதாபங்கள் எனும் youtube சேனலில் பல்வேறு விவகாரங்களை கன்டென்ட் ஆக தயார் செய்து வீடியோக்களை உருவாக்கி வழங்குவார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் பற்றியும் குடும்பத்தில் நடக்கும் விவகாரங்கள் தொடர்பாகவும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை குறிப்பிட்டும் மக்களை சிரிக்க வைக்கும் வகையில் வீடியோவாக தயாரித்து வழங்குவார்கள்.
சில வீடியோக்கள் சமூக பிரச்சனைகளை பற்றி பேசும்போது அதற்கு எதிர்ப்புக் கிளம்பும். அப்போது மன்னிப்பு கேட்டு அந்த வீடியோக்களை நீக்கியும் இருக்கிறார்கள். பலரது மனதைக் கவர்ந்த இந்த youtube சேனலில் வரும் வீடியோக்களுக்கு ஏராளமானோர் அடிமை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது பரிதாபங்கள் youtube சேனல். 6 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கடந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் இந்த youtube சேனலுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை மையமாகக் கொண்டு ஒரு வீடியோ தயாரிக்கப்பட்டது. சொசைட்டி பரிதாபங்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவானது ஏராளமானவரிடம் வரவேற்பை பெற்றிருந்தாலும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுதாகர் மற்றும் கோபி உள்ளிட்டூர் இணைந்து நடித்துள்ள இந்த வீடியோவில் வரும் கன்டென்ட் இரு சமூகத்தினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் இருப்பதாக கூறி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது... ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!
வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பெயரில் புகார் பதிவு செய்யப்பட்டது. பரிதாபங்கள் youtube சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெல்லை ஆணவ படுகொலை சம்பவத்தில் இரு சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை சித்தரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுர்ஜித் கைதானது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் அரசியல் ரீதியாக இதனை கையாண்டு வருவதாகவும் தயாரிப்பாளர் ஏ எம் சௌத்ரி தெரிவித்தார். Youtube என்பது நல்ல விஷயம்தான் ஆனால் உங்களைப் போன்ற கோமாளிகள் அவமானப்படுத்துவதாகவும் பரிதாபங்கள் youtube சேனலில் வெளியான சொசைட்டி பரிதாபங்கள் வீடியோவை சுட்டிக்காட்டி பேசினார்.
எச்ச நாய்களா…அறிவு வேண்டாமா…யார் போட்ட துண்டிற்காக இப்படி செய்கிறீர்கள் என்று மிகவும் கடுமையான வார்த்தைகளால் அவர் பேசியிருக்கிறார். குருபூஜையை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கடந்த ஆண்டு குருபூஜை பற்றி பேசிய சவுக்கு சங்கருக்கு என்ன நிகழ்ந்தது என தெரியுமா என்றும் பேசி இருக்கிறார். யாருடைய தூண்டுதலின் பேரில் கொலை செய்தார் என்ற அர்த்தத்தில் வீடியோ போட்டு இருப்பதாகவும் அப்போது யாருடைய தூண்டுதலில் காதலித்தீர்கள் என்று கேட்க முடியவில்லை எனவும் தனது வீடியோவில் ஏ. எம் சௌத்ரி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: டேய் கவினு.. அம்மாவ பாருடா! மகனின் உடலை பார்த்து கதறி துடித்த தாய்..!