உலகம் முழுவதும் தந்தையரின் பங்களிப்பையும், அன்பையும், தியாகத்தையும் கொண்டாடும் ஒரு சிறப்பு நாள் தந்தையர் தினம். தமிழ்நாட்டில், இந்த நாளில் மக்கள் தங்கள் தந்தையருக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களுடன் நேரத்தை செலவிடவும், பரிசுகள் அளிக்கவும், அல்லது அவர்களின் பங்களிப்பை பாராட்டி கவிதைகள், கடிதங்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தவும் செய்கின்றனர்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே கடும் மோதல் நிலவிவரும் நிலையில், அன்புமணி தந்தை குறித்து உருக்கமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அப்பா VS மகன்! இரண்டாக உடைந்த பாமக... உச்சகட்ட பரபரப்பு!

அவரது பதிவில் தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம். தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம் என கூறி உள்ளார்.

தந்தைக்கு மகனுக்கும் இடையே பெரும் மோதல் நிலவி வரும் சூழலில் கட்சி வேறு உறவு வேறு என அன்புமணி நினைக்கிறாரா அல்லது தந்தையர் தியாகதீபம் என குறிப்பிட்டு தலைவர் பதவியை தனக்கு விட்டுக் கொடுக்க சொல்கிறாரா என்று விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாமக நிர்வாகி சுட்டுக்கொலை! அன்புமணி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!