பாமகவின் சமூக தீர்வு ஏற்படும் என எண்ணப்பட்ட நிலையில் இரண்டாகப் பிரிந்துள்ளது. அன்புமணி ஆதரவாளர்கள் ஒருபுறமும் ராமதாஸ் ஆதரவாளர்கள் ஒருபுறமும் என பாட்டாளி மக்கள் கட்சி துண்டாடப்பட்டுள்ளது. அன்புமணியும் ராமதாசும் தனித்தனியே தாங்கள் நியமித்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர்.

நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் சமூகத் தீர்வு ஏற்படும் என பேசி வந்த ராமதாஸ் கூட உயிரோடு இருக்கும் வரை தானே பாமகவின் தலைவர் என்றும், அன்புமணி தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என நடந்து கொள்வதாகவும், தன்னை மார்பில் குத்தி விட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனை அடுத்து அன்புமணி ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய பொறுப்பாளர்களை என்னையமித்து ராமதாஸ் அறிவித்த நிலையில் இன்று ராமதாசணியில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: அப்பா என்றாலே தியாகம் தான்! பாசமா? பதவிக்கு அடியா? வைரலாகும் அன்புமணி கருத்து !

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ராமதாஸ் - அன்புமணி என பாமக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

ராமதாசால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கு மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அப்பா VS மகன்! இரண்டாக உடைந்த பாமக... உச்சகட்ட பரபரப்பு!