பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி யாருக்கு என்பதில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், 46 ஆண்டுகள் கட்சியை கட்டிக்காத்த எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையேற்க உரிமை இல்லையா என்று கேள்வி எழுப்பி, வடிவேல் ராவணன் உள்ளிட்டவர்கள் தன்னை சந்திக்கக் கூடாது என அன்புமணி தடுத்ததாக ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன் என்றும் ராமதாஸ் கிண்டலாக கூறியிருந்தார்.

தைலாபுரத்தை விட்டு பனையூரில் வடிவேல் ராவணன் தஞ்சமடைந்ததாகவும், அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வேறொருவரை நியமிக்க முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: தீரா பிரச்சனை.. தைலாபுரத்தில் பரபரப்பு! ராமாதாஸ் அணி மா.செ. கூட்டம்..!

இந்த நிலையில், பாமக பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணனை பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கி உள்ளார். அவருக்கு பதிலாக புதிய பொதுச் செயலாளர் ஆக தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த முரளி சங்கர் என்ற பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவரை ராமதாஸ் நியமனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: அப்பா என்றாலே தியாகம் தான்! பாசமா? பதவிக்கு அடியா? வைரலாகும் அன்புமணி கருத்து !