ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், மாநிலத்தின் தொடர்ச்சியான மக்கள் தொகை வீழ்ச்சியைத் தடுக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மூன்றாவது குழந்தை பிறந்தால் ரூ.30,000 மற்றும் நான்காவது குழந்தை பிறந்தால் ரூ.40,000 வரை ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
இந்தத் தொகை குழந்தை பிறந்த உடனேயே தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டம் நர்சன்னபேட்டாவில் நடைபெற்ற சொர்ணாந்திரா-சுவச்சாந்திரா தூய்மைத் திட்ட நிகழ்ச்சியின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

முன்பு இரண்டாவது குழந்தைக்கு ரூ.25,000 ஊக்கத் தொகை வழங்கும் யோசனையை முன்வைத்திருந்த முதலமைச்சர், தற்போது மூன்றாவது மற்றும் நான்காவது குழந்தைகளுக்கான உயர்ந்த தொகையை அறிவித்துள்ளார். இந்த முடிவு சமூகத்துடன் இணைந்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: +2 தேர்வு முடிவுகள் வெளியீடு..! ஆளுநர் உத்தரவிட்டது ஏன்.? மக்கள் மாளிகை விளக்கம்..!!
ஆந்திரப் பிரதேசத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ள நிலையில், இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், எதிர்கால தொழிலாளர் பலத்துக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், 4ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.40,000 என அதிரடி அறிவிப்பை ஆந்திர மாநில அரசு வெளியிட உள்ளது.
4ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு குழந்தை பிறந்த உடன் தாயின் வங்கிக்கணக்கில் ரூ.40,000 செலுத்தப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.ஆந்திர அரசின் இந்த அதிரடி அறிவிப்பு தென் இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை சமநிலைக்கான புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்படுவதால், பயனாளிகளுக்கு வெளிப்படைத்தன்மையும் உடனடி உதவியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாக்களிக்க செல்லும் மக்களுக்காக 11,323 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!