அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொன்ன அண்ணாமலையை விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள சூழ்நிலையில் பல பகிர் கிளப்பும் தகவல்களை அண்ணாமலை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் அண்ணாமலை பேசியதாவது; டிசம்பர் 23ஆம் தேதி சம்பவம் நடந்த நிலையில் அதன் பிறகு ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின் எஃப் ஐ ஆர் விவரம் கசிய விடப்பட்டது. சம்பவம் நடந்த போது ஞானசேகரனின் செல்போனில் இருந்து ஒரு காவல்துறை அதிகாரிக்கு அழைப்பு சென்றுள்ளது. மீண்டும் அந்த அதிகாரி ஞானசேகரனை அழைத்துள்ளார்.

இதற்கிடையில் டிசம்பர் 24 ஆம் தேதி கோட்டூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு செல்வதற்கு முன்பாக ஞானசேகரன் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் ஐந்து முறை பேசி இருக்கிறார். விசாரணைக்கு சென்று வந்த பிறகு ஒருமுறை பேசி இருக்கிறார். ஞானசேகரனிடம் பேசிய பிறகு கோட்டூர் சண்முகம் அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: கையாலாகாத காவல்துறை... அசிங்கப்படணும் முதல்வரே..! மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்...!
இதற்கு நடுவில், டிசம்பர் 23 டிசம்பர் 24, 25, 26 என மொத்தமாக நான்கு நாட்களில் கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி செய்யும் நடராஜனும் 13 முறை பேசியிருக்கிறார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? யாரைக் காப்பாற்ற இந்த பதற்றம் என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள் இண்ணமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஞானசேகரன் யாருடன் பேசினார் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில், அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவறான தகவலை வெளியிட்டு இருந்தால் அண்ணாமலையை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking முதல்ல உங்க கட்சிக்காரர்களை அடக்குங்க ஸ்டாலின் ... திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை...!