சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாணவி அளித்த புகாரின் பேரில், செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் டிசம்பர் 25-ஆம் தேதியன்று 37 வயதாகும் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு மே 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தெரிவித்தது.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தீர்ப்பை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அதிரடி தீர்ப்பை வழங்கினார். அவருக்கான தண்டனை விபரங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: #BREAKING விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை... நாளை அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு...!
அதன்படி குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் தீர்ப்பளிக்கப்பட்டது. ஞானசேகருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரின் தாயார் கங்காதேவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: மோசடிக்கு துணையா? அண்ணா பல்கலை விவகாரத்தில் நடவடிக்கை எடுங்க... வானதி சீனிவாசன் வலியுறுத்தல்...!